உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவரா? அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,March 08 2022]

உக்ரைன் ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இணைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனை காப்பாற்ற அந்நாட்டு மக்கள் பலர் ராணுவத்தில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சாய் நிகேஷ் என்ற மாணவர் உக்ரைன் துணை ராணுவப் படையில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டில் ஏரோபெஸ் என்ற பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சாய் நிகேஷ், அந்நாட்டின் நேஷனல் லிஜியன் என்னும் துணை ராணுவப் பிரிவில் சேர்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சாய்நிகேஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய விரும்பியதாகவும் ஆனால் அவர் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தற்போது போர் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள பொதுமக்கள் பலர் தங்கள் தாய்நாட்டை காக்க விரும்பி உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து வரும் நிலையில் சாய் நிகேஷும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது .

உக்ரைனில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் மாணவர் சாய்நிகேஷ் மட்டும் உக்ரைன் நாட்டின் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

மனைவியை திடீரென விவகாரத்து செய்த பாலா; காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உக்ரைனில் இருந்து வெளியேற மறுத்த இந்திய டாக்டர்: அதிர்ச்சி காரணம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது

தேங்க்யூ தம்பி: சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன விமல்!

 நடிகர் விமல் தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனுக்கு 'தேங்க்யூ தம்பி' என்று பதிவு செய்திருப்பதை அடுத்து அந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

ஷேர்வார்னே மரணம்: பூங்கொத்துடன் ஆம்புலன்ஸில் நுழைந்த பெண்மணி யார்?

ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேர் வார்னேவு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு

சிவகார்த்திகேயன் மாதிரி என்னால் நடிக்க முடியாது: அருள்நிதி

சிவகார்த்திகேயன் மாதிரி தன்னால் நடிக்க முடியாது என நடிகர் அருள்நிதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.