இளம் இயக்குனரின் வேண்டுகோளுக்கு தமிழ் ராக்கர்ஸின் ரியாக்சன்

  • IndiaGlitz, [Thursday,December 21 2017]

இளம் இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தயாரிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மினிடம் நேற்று ஒரு வேண்டுகோளை வைத்தார் என்பதை பார்த்தோம்

தங்களது உழைப்பை மதிக்கும் வகையில் இந்த படத்தை ஒரு மாதத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் போட வேண்டாம் என்ற வேண்டுகோளை நேற்று தமிழ் ராக்கர்ஸ் ஓரளவு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. நேற்று வரை இந்த படத்தின் ஆன்லைன் பைரஸி லிங்க், இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இருந்தது. ஆனால் தற்போது முகப்பு பக்கத்தில் நீக்கப்பட்டுள்ளது. உள்ளே உள்ள லிங்க்கை நீக்குவது கடினம் என்றும், உள்பக்கத்தில் இருப்பதால் பலர் ஆன்லைனில் பார்க்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தமிழ்கன், தமிழ்MV ஆகிய இணையதளங்களில் இந்த படம் முற்றிலும் நீக்கப்பட்டதாக தெரிகிறது.

இளம் இயக்குனரின் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து இணையதளத்தில் இருந்து நீக்கிய தமிழ் ராக்கர்ஸ் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது என்றாலும், இதைப்போலவே மற்ற படங்களையும் ஒரு மாதத்திற்கு பின்னர் இணையதளத்தில் அப்லோட் செய்தால் நல்லது என்பதே அனைத்து தயாரிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.

More News

ஏ.ஆர்.ரஹ்மானின் 9.09 ரகசியம் என்ன தெரியுமா?

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று இரவு 9.09 மணிக்கு தனது சமூக வலைத்தளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சற்றுமுன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் நயன்தாரா. மோகன்ராஜா

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் 'வேலைக்காரன்'.

சூர்யாவுக்கு ஜோடியாகும் டீச்சர் நடிகை

சூர்யா நடித்துள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடிக்கும் படம் ஒன்றை பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே

வெற்றிவேல் நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டார்: இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று காலை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில்

மதுரை அன்பு மீதான வழக்கு அவ்வளவுதானா?

பிரபல இயக்குனர், நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செல்வனை