close
Choose your channels

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் பிரபலம் தற்கொலை: ஜேம்ஸ்வசந்தன் இரங்கல்

Sunday, April 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் பிரபலம் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. மலேசியாவில் நடைபெறும் வானவில் சூப்பர் ஸ்டார் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாடிய பிரபல பாடகர் தேவ் என்பவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது

இது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: இங்கு ’சூப்பர் சிங்கர்’ போல மலேஷியாவில் அஸ்ட்ரோ சேனலில் 'வானவில் சூப்பர் ஸ்டார்' என்றொரு நிகழ்ச்சி உண்டு. அதை கடந்த சில வருடங்களாக இயக்கி வந்த, திறமை வாய்ந்த தேவ் என்னும் இளைஞன் நேற்று தற்கொலை செய்துகொண்டான் என்கிற செய்தி பேரிடியாக வந்தது.

அவன்மேல் கோபமாக வருகிறது. அவனுக்குக் கடைசி நேரத்தில் தைரியத்தைக் கொடுத்து ஊக்கப்படுத்த நான் அருகில் இல்லாமல் போய்விட்டேனே என்று மனம் வேதனைப்படுகிறது.
என்மேல் அவ்வளவு பாசமும், மரியாதையும் கொண்டவன். இந்தக் கொரோனா கொடூரமெல்லாம் ஓய்ந்தபின் சென்னைக்கு வந்து என்னோடு கொஞ்ச நாள் இருந்து திரைப்பட வேலைகளைக் கற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்தான்.

கொரோனாவுக்கு சற்று முந்திதான் இங்கு வந்து பல கோயில்களுக்கெல்லாம் சென்றுவிட்டு என் வீட்டிற்கு வந்து நம்மூர் சாப்பாடை அவ்வளவு ரசித்துச் சாப்பிட்டான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க ஏற்பாடுகளெல்லாம் செய்துகொடுத்தேன்.

இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூலில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment