close
Choose your channels

பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. கோலிவுட்டில் பரபரப்பு..!

Tuesday, July 30, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளர் வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை அசோக் நகர் 19வது அவென்யூவில் ரவீந்தர் சந்திரசேகர் வீடு உள்ள நிலையில் இங்கு தான் அவரும் அவருடைய மனைவி நடிகை மகாலட்சுமி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை புகார் வந்ததை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் இன்று திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நகராட்சி திட கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் தொழிலதிபர் பாலாஜி என்பவரிடம் ரூபாய் 16 கோடி மோசடி செய்ததாக ரவீந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் சோதனை செய்து வருவதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லிப்ரா புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment