பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. கோலிவுட்டில் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,July 30 2024]

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளர் வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை அசோக் நகர் 19வது அவென்யூவில் ரவீந்தர் சந்திரசேகர் வீடு உள்ள நிலையில் இங்கு தான் அவரும் அவருடைய மனைவி நடிகை மகாலட்சுமி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை புகார் வந்ததை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் இன்று திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நகராட்சி திட கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் தொழிலதிபர் பாலாஜி என்பவரிடம் ரூபாய் 16 கோடி மோசடி செய்ததாக ரவீந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் சோதனை செய்து வருவதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லிப்ரா புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

திருமணத்திற்கு முன் பிரேம்ஜி மனைவி கொடுத்த முத்தம்.. அவரே வெளியிட்ட வீடியோ..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி மனைவி இந்து சற்று முன் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவழியாக டேக் ஆஃப் ஆகும் ஜேசன் சஞ்சய் படம்.. இனி அடுத்தது படப்பிடிப்பு தான்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு ஒரு ஆண்டுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட தகவல் எதுவும் வெளிவராததால் இந்த படம் ட்ராப்

மகளுக்கு பெயரை மாற்றுகிறாரா நடிகை கெளதமி? என்ன காரணம்?

நடிகை கெளதமி தனது ஒரே மகள் சுப்புலட்சுமியை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் இதற்காக அவரது பெயரை மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை

விஷாலை அடுத்து தனுஷுக்கும் தடை.. தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் விஷாலை வைத்து திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்து பேச வேண்டும் என்று அறிக்கை வெளியிட்ட நிலையில்

சமந்தாவை அடுத்து சிக்கிய நயன்தாரா... கொந்தளித்த டாக்டரால் பரபரப்பு..!

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் நெபுலைசர் என்ற மருத்துவ சிகிச்சை தனக்கு மிகவும் பயன்பட்டதாக கூறி ஒரு நீண்ட விளக்கமும் அளித்து இருந்தார்.