தமிழக முதல்வருக்கு தயாரிப்பாளர் சங்கம் வைத்த முக்கிய வேண்டுகோள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழக முதல்வருக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு அறிவித்துள்ள கலைமாமணி விருது பெரும்‌ தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ முன்னாள்‌ தலைவரும்‌, பிலிம்‌ பெடரேஷன்‌ தலைவருமான கலைப்புலி எஸ்‌.தாணு, மற்றும் தயாரிப்பாளர்கள்‌ ஜிரு.ஐசரிகணேஷ்‌, திரு.மனோஜ்குமார்‌, திரு.கெளதம்‌ வாசுதேவ்‌ மேனன்‌, திரு.ஜாகுவார்தங்கம்‌, நடிகரும்‌, தயாரிப்பாளர்களுமான திரு.ராமராஜன்‌, திரு.சிவகார்த்திகேயன்‌, ஆகியோருக்கு தமிழ்த்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்‌.

மேலும்‌, கலைமாமணி விருது பெறும்‌ நடிகர்‌, நடிகையர், இயக்குனர்கள்‌, தொழில்நுட்ப கலைஞர்கள்‌, பத்திரிகையாளர்கள்‌ அனைவருக்கும்‌ வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. மேற்கண்ட கலைஞர்களுக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ள தமிழக அரசிற்கும்‌, தமிழக முதல்வா்‌ அவர்களுக்கும்‌, துணை முதல்வர்‌ அவர்களுக்கும்‌, செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சா்‌ அவர்களுக்கும்‌, இயல்‌ இசை நாடக மன்றத்‌ தலைவர்‌ திரு.தேவா அவர்களுக்கும்‌, அதன்‌ உறுப்பினர்களுக்கும்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ சார்பாக நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

அதேசமயம்‌ சிறு முதலீட்டில்‌ தயாரிக்கப்பட்டு 2015,2016,2017 ஆண்டுக்கான மானியத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைத்துத்‌ தயாரிப்பாளர்களுக்கும்‌ மானியத்தொகையினை வழங்கி அந்த தயாரிப்பாளர்களின்‌ வாழ்வில்‌ உள்ள இருளை நீக்கி வெளிச்சம்‌ கொடுக்குமாறு தமிழக முதல்வர்‌, துணை முதல்வர், செய்தி மற்றும்‌ விளம்பரத்துறை அமைச்சர்‌ ஆகியோரிடம்‌ தமிழத்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ இருகரம்‌ குவித்து கேட்டுக்கொள்கிறோம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More News

எங்கிருந்து எடுத்தேனோ அங்கேயே கொடுத்துவிட்டேன்: விஜய்சேதுபதியின் தன்னடக்கம்!

சினிமாவை பொறுத்தவரை திரையில் தோன்றும் கதாநாயகன், கதாநாயகி போன்றவர்களை தான் பொது மக்களுக்கு அதிகம் தெரியும். ஆனால் அந்த சினிமாவை உருவாக்க பின்னணியில் நூற்றுக்கணக்கானோர்

விவசாயிகளின் நலனுக்காக 10 இடங்களில் பிரம்மாண்ட சந்தை- முதல்வர் அதிரடி அறிவிப்பு!

விவசாயிகளின் நலனுக்காக 10 மாவட்ட தலைநரங்களில் 20 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட சந்தை உருவாக்கப்படும்

ஒரு தவறுக்காக ஒதுக்கப்பட்ட வீரர்… ஐபிஎல் ஏலத்தில் நடந்த சோகம்!

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ். மிகச் சிறந்த பேட்டிங் வீரரான இவர் தற்போது டி20 போட்டி மற்றும் அந்நாட்டின் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

கடல் நடுவே அந்தரத்தில் பிகினியில் கலக்கும் சூர்யா-கார்த்தி பட நடிகை!

சூர்யா நடித்த 'என்ஜிகே' கார்த்தி நடித்த 'தேவ்' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்பட பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத்தி சிங்.

பிக்பாஸ் கமல்ஹாசனுக்கு பெருமை சேர்க்கும் சென்னை புத்தக கண்காட்சி!

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடைபெறும் என்பதும் இந்த கண்காட்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருவார்கள் என்பதும் தெரிந்தது