200 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,November 27 2021]

தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் மிக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கனமழை சென்னையில் பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘டெல்டா மாவட்டங்களில் இருந்து மெல்ல மெல்ல மேகங்கள் சென்னையை நோக்கி வந்து அடைந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக சென்னை மாநகரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது

பெரும்பாலான பகுதிகளில் நாளை காலை 100 மில்லி மீட்டர் மழை அளவை தாண்டி விடும். மேலும் கடலூர், காரைக்குடி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மிக நல்ல மழை பெய்யும். சென்னையில் 1000 மில்லிமீட்டர் மழையை தொடுவதற்கு இன்னும் 70 மில்லி மீட்டர் மழை அளவே தேவைப்படுகிறது. நவம்பர் மாதத்திற்குள் 1,000 மில்லி மீட்டர் மழை எட்டிவிடும். கடந்த 200 ஆண்டுகளில் சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை என்பது நான்கு முறை மட்டுமே வந்துள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்

கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை சென்னையில் மழை பெய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 23 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை

ஜாம்பவான் வரிசையில் இடம்பிடித்த ஸ்ரேயாஸ்… முந்தைய சாதனை பட்டியல்…

தான் கலந்து கொண்ட முதல் சர்வதேசப் போட்டியிலேயே அசராமல் விளையாடி ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்துள்ளார்.

வெள்ளை தாவணியில் கலக்கலான புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகை!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “அட்டகத்தி“ திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்தான் நடிகை நந்திதா ஸ்வேதா.

Prank-இல் சிக்கி, திணறிய பிரபல நடிகை… க்யூட் வீடியோ வைரல்!

தமிழ் சினிமாவில் கலகலப்பான மற்றும் போல்டான நடிகையாக வலம்வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழைத் தவிர கன்னடம்,

இரட்டைத் தேவதை… நகல் போல இருக்கும் மகளுடன் நடிகை மீனா நடத்திய போட்டோஷுட்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் 80களில் கதாநாயகியாகக் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை மீனா.