சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடசென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ECR மற்றும் OMR பகுதிகளிலும், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக டிசம்பர் 6ஆம் தேதி வரை, மழை பெய்யக்கூடும் என்றும் இந்த மழை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாலோ அல்லது புயலால் வருபவை அல்ல என்றும் இதுகுறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியபடியே இன்று சென்னையில் உள்ள முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி, அலுவலகலம் செல்வோர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மேலும் இன்றைய கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என் அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

More News

பாக்கத்தானே போற இந்த காளியோட ஆட்டத்த: 'பேட்ட' சிங்கிள் டிராக் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் அட்டகாசமாக அனிருத் இசையமைத்த 'மரண மாஸ் குத்து பாடல் சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது.

என்.ஜி.கே புதிய அப்டேட்: தயாரிப்பாளர் தகவலால் ரசிகர்கள் குஷி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த தீபாவளி அன்றே வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இடையில் செல்வாரகவன்

'96' ஜானுவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபீசில் வசூலை அள்ளிக்குவித்தது. இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை

திருமணத்திற்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன விஜய் நாயகி

இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகில அறிமுகமான நடிகை ஜெனிலியா, விஜய் நடித்த 'சச்சின்' மற்றும் வேலாயுதம் உள்பட பலதிரைப்படங்களில் நடித்தார்.

போலீசாரின் மெத்தனத்தால் உயிரோடு எரிக்கப்பட்ட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்

பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மீடூ உள்பட பல வழிகள் இருந்தாலும் தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.