ஆப்பிள் தயாரிப்புகளின் புதிய மையமாகிறது தமிழகம்- முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்!

  • IndiaGlitz, [Saturday,January 30 2021]

நேற்று தமிழக அமைச்சரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் 52 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் ரூ.52,257 கோடி முதலீட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களை தமிழகத்தில் தயாரித்து உலக நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளன. மேலும் இப்புதிய திட்டங்களின் வாயிலாக தமிழகத்தை சேர்ந்த சுமார் 95,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒசூர் பகுதியில் ஆப்பிள் நிறுவனப் பொருட்களை தயாரிப்பதற்கு புதிய தொழில் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்திற்காக 5,763 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 18 ஆயிரத்து 250 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து தற்போது சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொலைபேசிகளை உற்பத்தி செய்வதற்கும் இதற்கான புதிய தொழில் நிறுவனம் தொடங்கவும் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை தயாரிப்பதற்கு டாடா எலக்ட்ரானிக்ஸ், பெகாட்ரான் கார்ப்பரேஷன் மற்றும் லக்ஸ்ஷேயர் ஆகிய தொழில் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதன் ஒட்டுமொத்த முதலீடு ரூ.52,257 கோடி. இப்புதிய தொழில் நிறுவனங்களால் தமிழகத்தில் உள்ள 95 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்தும் தொழில் நிறுவனங்களைத் தொடங்கியும் தமிழக அரசு அதிரடி காட்டிவருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளின் மையமாக தமிழக மாறிவருவது மக்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 5 சிறுவர்கள்… பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது பெண்மணி ஒருவரை 5 சிறுவர்கள்

என் பலம் என்னன்னு எனக்கே இப்பதான் தெரியுது: பிக்பாஸ் வின்னர் ஆரி!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் ஆரி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் 'என் பலம் என்னன்னு எனக்கே தெரிஞ்ச ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ் என்று கூறியுள்ளார் 

கமல் கட்சியுடன் கூட்டணி சேரும் டெல்லி கட்சி: பிப்ரவரி 21ல் அறிவிப்பா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி

குரங்குகளுடன் இங்கிலீஷில் பேசிய தமிழ் நடிகை: வைரல் வீடியோ

குரங்குகளுக்கு உணவு தின்பண்டங்கள் அளித்ததோடு அதனுடன் இங்கிலீஷில் பேசிய வீடியோவை தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு இன்ப அதிர்ச்சி: ஷிவாங்கி வெளியிட்ட வைரல் வீடியோ!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது