தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? முக்கிய அறிக்கை இன்று தாக்கல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கான நேரடி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதால் பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டது.

இருப்பினும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பெற்றோர்களிடம் கருத்து கேட்டு அதன்பின் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் பெற்றோர்களிடம் கருத்து கேட்ட நிலையில் 80% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க சம்மதித்துள்ள நிலையில் பெற்றோர்களின் கருத்துக்களை கொண்டு அறிக்கையாக தயார் செய்யப்பட்டு இன்று முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவை பள்ளி கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே இந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய அறிவிப்பை விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உதவி கேட்கும் தன்னுடைய பட ஹீரோவை பார்த்து கண்கலங்கிய பாரதிராஜா: வைரல் வீடியோ!

தன்னுடைய படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து அவரை நேரில் பார்த்த

அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு: ட்விட்டர் நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தாலும் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்ற நடவடிக்கை எடுத்து வருவது

அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து: 10 குழந்தைகள் பரிதாப பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாரா என்ற மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக

'D43' படத்தின் டைட்டில் குறித்து தனுஷின் டுவீட்!

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' மற்றும் ஒரு பாலிவுட் திரைப்படம் என மூன்று திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு

இளம் நடிகரின் அடுத்த படத்தில் 'பிக்பாஸ்' சம்யுக்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் திரையுலகில் வாய்ப்பை பெற்று வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்