ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூடியது. சுமார் 3 மணி நேரம் இந்த கூட்டத்தில் நடந்த ஆலோசனையை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கு மே 17 வரை நீட்டிப்பு செய்த மத்திய அரசின் முடிவை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதேபோல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்த தளர்வும் கிடையாது என்றும், ஆரஞ்சு பகுதிகளில் படிப்படியாக தளர்வு ஏற்படுத்தப்படும் என்றும், சிறு குறு தொழில்கள் தொடங்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சென்னை உள்பட சிகப்பு மண்டல பகுதியாக இருக்கும் 12 மாவட்டங்களுக்கு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் சென்னையில் அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பதால் சென்னையில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வலியுறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

எத்தனை கோடி கொடுத்தாலும் வேண்டாம்: தளபதி விஜய் உறுதி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 9ம் தேதியே ரிலீசாக வேண்டிய நிலையில் தற்போதைய கொரோனா பாதிப்பு காரணமாக

மீண்டும் முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பால் பரபரப்பு

ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்காக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது என்பதும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பால்,

கொரோனா பீதியில் சுரங்கம் தோண்டி தப்பிக்க முயன்ற சிறை கைதிகள்!!!

கொரோனா பரவல் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் சிறை கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற பதட்டம் நிலவிவருகிறது.

வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வரும் நிலையில் கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களில் சமூக விலகலை கடைபிடிக்காததால்

பிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற நபர் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது