சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் கொரோனா சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி, மகன், மாமனார், மாமியார் ஆகிய நால்வருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனையடுத்து நால்வரும் கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும், தன்னுடைய குடும்பத்தினர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளரின் குடும்பத்தினர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

மகளால் சீயான் விக்ரமுக்கு கிடைத்த பதவி உயர்வு: குவியும் வாழ்த்துக்கள்

சமீபத்தில் திருமணமான மகளால் சீயான் விக்ரமுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் 

இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு: திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும் 15 அர்ச்சகர்கள் உள்பட திருப்பதியில் மட்டும் சுமார் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

26 வயது பெண் டிவி ரிப்போர்ட்டர் சாலை விபத்தில் பலி!

26 வயது பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்த சம்பவம் ஊடகவியலாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

பல மாதங்களுக்கு பின் சந்திப்பு: மகிழ்ச்சியில் தளபதி விஜய் குடும்பம்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு சில மாதங்களாக கனடாவின் சிக்கியிருந்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சென்னை திரும்பியுள்ளதால்

பிரபல அரசியல்வாதிக்கு எச்சரிக்கை விடுத்த காயத்ரி ரகுராம்!

கந்த சஷ்டி கவசம் குறித்த பிரச்சனை கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து தற்போது அரசியல் தலைவர்களும் கருத்துக்கூற தொடங்கிவிட்டனர்.