விஜய்யை அடுத்து 'அசுரன்' வசனத்தை கூறிய முதல்வர் ஸ்டாலின்.. வெற்றிமாறனுக்கு கிடைத்த பெருமை..!

  • IndiaGlitz, [Tuesday,June 27 2023]

சமீபத்தில் நடிகர் விஜய், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘அசுரன்’ படத்தின் வசனத்தை குறிப்பிட்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறிய நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் அதே வசனத்தை கூறி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசும்போது ’நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். நன்றாக விளையாடி உடலை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த கல்வியின் மூலம் பகுத்தறிவையும் சுயமரியாதையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அந்த படிப்பை வைத்து சிந்தியுங்கள். புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துங்கள். படிப்பு மட்டும் தான் உங்ககிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாத சொத்து.

உங்கள் படிப்பையும் திறமையும் பார்த்து பெரிய பெரிய கம்பெனிகள் உங்களுக்கு வேலை தருவார்கள். நீங்களே தொழில் தொடங்கி நிறைய பேருக்கு வேலை கொடுக்கலாம். உங்களுடைய மற்ற கவலைகளை போக்க, மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய நமது திராவிட மாடல் ஆட்சி உள்ளது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் இருக்கும் வரை நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று பேசி உள்ளார்.

படிப்பு தான் உங்கள் சொத்து’ என்ற வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் இடம்பெற்ற வசனத்தை விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய நிலையில் தற்போது தமிழக முக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பேசியுள்ளது இயக்குனர் வெற்றிமாறனுக்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகிறது.

More News

இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட்: முழு அட்டவணை வெளியீடு..!

இந்த ஆண்டு இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணை சற்றுமுன் வெளியாகியுள்ளது.

அம்மாவுக்கு பெருமை தேடி கொடுத்த நடிகை மாதவியின் மகள்.. என்ன செஞ்சிருக்கார் பாருங்க..!

தமிழ் திரையுலகில் கடந்த 80 களில் கனவு கன்னியாக இருந்த நடிகை மாதவியின் மகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் அவருக்கு உலகின் இரண்டு சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து மேல் படிப்பு படிக்க அழைப்பு

ஆருத்ரா கோல்டு மோசடி.. தமிழ் ஹீரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழ் ஹீரோ ஒருவர் 15 கோடி ரூபாய் பணம் பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூர்யா சொன்னது அப்ப புரியல, இப்ப தான் புரியுது: உதயநிதி ஸ்டாலின்..!

சூர்யா சொன்னது அப்போது புரியவில்லை ஆனால் இப்போதுதான் புரிகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடந்த சினிமா விழா ஒன்றில் பேசியுள்ளார்

ஊட்டிக்கு பைக் டிராவல் சென்ற இளம் நடிகர்… கோர விபத்தில் சிக்கி வலது காலை இழந்த சோகம்!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருந்து மறைந்த நடிகர் ராஜ்குமாரின் நெருங்கிய உறவினரும் தற்போது ஒருசில திரைப்படங்களில் நடித்து வருபவருமான இளம் நடிகர் சூரஜ்குமார்