டிடிவி தினகரனை நம்பிச் சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும்-முதல்வர் எச்சரிக்கை!

பெங்களூரு சிறையில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவை அமமுக கட்சியினர் பல இடங்களில் மரியாதை செய்து வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் சில அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டதாகச் செய்தி வெளியானதை அடுத்து அவர்களை கட்சியில் இருந்து விலக்கி விட்டதாக அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படப் போவதாகவும் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனை நம்பிச் சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டுமென அதிரடியாகக் கருத்துத் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே 18 சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை நம்பி சென்று நடுரோட்டில் நிற்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், கட்சியில் 10 ஆண்டு காலமாக உறுப்பினர் இல்லாத டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக முயற்சித்து வருவதாகவும் கூறிய அவர், அத்தகைய முயற்சிகளை அதிமுக முறியடிக்கும் என்றும் சூளுரை எடுத்துக் கொண்டார்.

More News

டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு… அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் டியூசன் சென்டரில் படித்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடை பந்தயத்தில் புதிய சாதனை படைத்த 19 வயது வீராங்கனை… குவியும் பாராட்டு!

அசாம் மாநிலத்தின் சாருசஜாய் மைதானத்தில் 36 ஆவது தேசிய ஜுனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

'காதலர் தினத்தில்' கலக்கல் அறிவிப்பு: நயன் குறித்து விக்னேஷ் சிவன் டுவீட்

காதலர் தினத்தில் ஒரு கலக்கலான அறிவிப்பு வெளியாக இருப்பதாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அரசு விழாவாக மாறும் கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள்! தமிழக முதல்வர் அறிவிப்பு!

புகழ் பெற்ற ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிறந்த முருகப் பக்தராகவும் அறியப்பட்ட கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் விழா இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்

நான் அப்பவே சொன்னேன்… இந்திய ரசிகர்களை சீண்டி இங்கிலாந்து வீரர் போட்ட அதிரடி டிவிட்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் முன்னதாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி விட்டு வெற்றிக் கோப்பையுடன் தாயகம் திரும்பினர்.