பா.ஜ.க.வின் மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது: செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..!

  • IndiaGlitz, [Wednesday,June 14 2023]

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து தற்போது சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?

வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?

பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.

2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

More News

மீண்டும் கமல் படத்தில் விஜய்சேதுபதி.. மாஸ் தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் 'விக்ரம்',  இந்த   திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டி இருந்தார் என்பதும் குறிப்பாக கமல் மற்றும் விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சிகள்

48 வயதில் செம மாஸான நீச்சல்உடை போஸ்… நடிகை ஷில்பா ஷெட்டியின் வைரல் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையும் ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாக இருந்து வருபவரான நடிகை ஷெல்பா ஷெட்டி பிகினி உடையணிந்து

'வண்ணாரப்பேட்டையில ஒரு வௌவாலு ஏங்கிருச்சாம்: 'மாவீரன்' சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதாக வெளியான அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பொறியாளரான 14 வயது சிறுவன்… சாதித்தது எப்படி?

உலகிலேயே மகப்பெரிய தனியார் விமான ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் 14 வயது சிறுவன் இளம் பொறியாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

லிவ்-இன் உறவுமுறையில் வாழ்பவர்கள் விவாகரத்து பயனை பெறலாமா? கேரள நீதிமன்றம் தீர்ப்பு!

திருமணம் செய்துகொள்ளாமல் ஒப்பந்த அடிப்படையில் பதிவுசெய்துகொண்டு வாழ்ந்துவந்த இருவர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது