கொரோனா வைரஸ் எதிரொலி: தயாரிப்பாளர் சங்கம் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

சீனா, இத்தாலி, ஸ்பெயின் அமெரிக்கா உள்பட உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித உயிர்களை பலி வாங்கி கொண்டு வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையரங்குகள் மால்கள் கடைகள் ஆகியவை மூடப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் சில மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டும், திரையரங்குகள் மால்கள் மூடப்பட்டும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலும் கேரள மாநில எல்லையில் உள்ள திரையரங்குகளை மூட தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது என்பதும் எல்கேஜி யுகேஜி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்த் திரையுலகிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் வாரங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விஜய்யின் ’மாஸ்டர்’ சூர்யாவின் ’சூரரைப்போற்று’ போன்ற படங்கள் திட்டமிடப்பட்ட ரிலீஸ் தேதியில் வெளியாக வாய்ப்பு இல்லை என்றும் இந்த படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கில்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி மார்ச் 31-ஆம் தேதி வரை தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் ’அண்ணாத்த’, சிம்புவின் ’மாநாடு’ அஜித்தின் ’வலிமை’ உள்பட பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பீதி காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் புதிய படப்பிடிப்புகள் ஆரம்பமாகி வருகின்றன 

த்ரிஷாவுக்கு பதில் யார்? சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' நாயகி குறித்த தகவல்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் கொரட்டலா சிவா இயக்கிவரும் 'ஆச்சாரியா' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த திரிஷா திடீரென அந்த படத்திலிருந்து விலகினார்

பிரபுதேவா, சஞ்சிதா ஷெட்டி இணைந்து சந்தித்த பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலர் மகா அவதார் பாபாஜியின் தீவிர பக்தர்களாக இருந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாபாஜியின் சீடர்களில் ஒருவரான பரமஹம்ச பிரஜானந்த மஹாராஜ் என்பவரை

என்ன நடக்கிறது மத்தியப் பிரதேச சட்ட சபையில்???

கடந்த 2008 டிசம்பரில் மத்தியப் பிரதேச சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114 இடங்களை வென்றது. 2 பகுஜன் சமாஜ், 1 சமாஜ்வாடி

பிரபல நடிகரின் மகனை காதலிகின்றாரா யாஷிகா? வைரலாகும் புகைப்படங்கள்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான யாசிகா ஆனந்த் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை அவ்வப்போது ஏற்படுத்தி வருவார் என்று தெரிந்தே