close
Choose your channels

'வீரன்' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த மாஸ் நடிகரா? ஆச்சரிய தகவல்..!

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ’வீரன்’ என்ற திரைப்படம் வரும் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி, வினய் ராய், ஆதிரா ராஜ் , முனிஷ்காந்த், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ’வீரன்’. இந்த படத்தின் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வீரன்’ திரைப்படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் சமீபத்தில் தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தனுஷை சந்தித்து சில கதைகள் கூறியதாகவும் கண்டிப்பாக நாம் இணைந்து பணி புரிவோம் என்ற நம்பிக்கையை தனுஷ் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

’வீரன்’ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் மீண்டும் தனுஷை ஏஆர்கே சரவணன் சந்திக்க இருப்பதாகவும், அப்போது இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் உருவான ’மரகத நாணயம்’ படத்தை தனுஷ் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஏஆர்கே சரவணன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் நடிப்பது குறித்து அறிவிப்பு வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment