close
Choose your channels

அந்த அடி நடிகைக்கானது அல்ல, வாக்களித்த மக்களுக்கு.. கங்கனாவை அடித்த பெண் குறித்து தமிழ் இயக்குனர்..!

Friday, June 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை நேற்று பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அடித்த நிலையில் இது குறித்து தமிழ் இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ’அந்த அடி நடிகைக்கானது அல்ல, அவருக்கு வாக்களித்த மக்களுக்கானது’ என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி என்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளார் என்பதும், அவர் இன்னும் ஒரு சில நாட்களில் எம்பி ஆக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று பஞ்சாப் மாநில சண்டிகர் விமான நிலையத்திற்கு கங்கனா ரனாவத் வந்தபோது அவருக்கும் பெண் காவலர் ஒருவருக்கும் வாக்குவாதம் நடந்ததாகவும் விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கங்கனா ரனாவத் பேசியதை அடுத்து அந்த பெண் காவலர் கங்கனாவின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து கங்கனா ரனாவத் புகாரின் அடிப்படையில் பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கங்கனா ரனாவத்தை அடித்த பெண் காவலரை ’சிங்கப்பெண்’ ’வீரப் பெண்’ என்று சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் கிடைத்து வரும் நிலையில் இயக்குனர் சேரன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.