close
Choose your channels

குளிர்பானத்தில் மயக்க மருந்து.. இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர் அதிரடி கைது..!

Monday, June 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தமிழ் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த தமிழ் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி என்பவர் அலுவலகத்தில் 28 வயது இளம்பெண் ஒருவர் பணி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து முகமது அலி, அந்த இளம் பெண்ணை காதலிப்பதாக கூறியதாகவும் அது மட்டும் இன்றி குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை ஆபாச வீடியோவாக பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த இளம் பெண் கர்ப்பமான நிலையில் சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்ததாகவும், கருக்கலைப்பு குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று தயாரிப்பாளர் முகமது அலி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ஐந்து லட்ச ரூபாய் வேண்டும் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து தயாரிப்பாளர் முகமது அலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம் பெண் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகார் உண்மை என்று தெரிய வந்ததை அடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி கைது செய்யப்பட்டார். அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.