அரசாங்கம் என்ன செய்கிறது? சென்னை வெள்ளம் குறித்து கேள்வி எழுப்பிய நடிகைகள்..!

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகள் உள்பட பல பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

வேளச்சேரி போன்ற பகுதிகளில் தரை தளம் முழுகி விட்டது என்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கூட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை அதிதி பாலன் தனது சமூக வலைதளத்தில் ’நான் திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் நகர் என்ற பகுதிக்கு சென்றேன். அங்கு மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து இருந்தது. நீரை வெளியேற்றிய போது இரண்டு விலங்குகளின் உடல்கள் கிடைத்தது. அந்த தண்ணீரில் கால் வைத்து தான் நான் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற சென்றேன். அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? பொது மக்களை காப்பாற்ற முயற்சிக்காமல் பெரிய விஐபியை மட்டும் காப்பாற்றுவதற்கு ஒரு குழு செல்கிறது என்ற குற்றம் காட்டி இருந்தார்

அதேபோல் நடிகை கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் கூறிய போது ’எங்கள் பகுதியில் எப்போதும் நீர் தேங்காது, 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் கூட நீர் இல்லை. ஆனால் ஏதோ காரணங்களுக்காக அவ்வப்போது குழிகள் தோண்டியதால் தான் தற்போது மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து எங்கள் வீட்டுக்குள் புகுந்துள்ளது. எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

லிவ்-இன் உறவில் இருந்த இளம் நடிகை தற்கொலை..  தலைமறைவாக இருந்த 'புஷ்பா' நடிகர் கைது..!

இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அதற்கு காரணமானவர் என சந்தேகப்படும் 'புஷ்பா' படத்தில் நடித்த நடிகர் ஒருவாரமாக தலைமறைவாக இருந்ததாகவும்,

டைட்டில் எடுத்துக்கோ, 50 லட்சம் எடுத்துக்கோ, என்ன வேணா பண்ணிக்கோ.. பூர்ணிமா சொன்னது யாரை?

'டைட்டில் எடுத்துக்கோ, 50 லட்சம் எடுத்துக்கோ என்ன வேணா பண்ணிக்கோ' என பூர்ணிமா, அர்ச்சனா குறித்து கூறிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது  

போயஸ் கார்டன் ரஜினி வீட்டுக்குள் மழைநீர் புகுந்துவிட்டதா? வைரல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் போயஸ் கார்டன் வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நானெல்லாம் கலாய்க்க ஆரம்பிச்சா உட்கார்ந்து மூணு நாள் அழுவ.. சொருகிடுவேன்: ஓவராய் பேசும் நிக்சன்..!

இன்றைய முதல் புரமோவில் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே நடந்த சண்டை குறித்து பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவிலும் அவர்கள் இருவரது சண்டை காட்சிகள்

செம்பரம்பாக்கம் மீன் எங்க வீட்டுக்குள்ள வந்துருச்சு.. மன்சூர் அலிகானின் வெள்ள வீடியோ..!

சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக பல ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல்