close
Choose your channels

நான் உலகின் மிக அழகிய பெண் இல்லை: திருமண தி்னத்தில் தமிழ் நடிகையின் உணர்ச்சிகரமான பதிவு!

Tuesday, October 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகை ஒருவர் நான் உலகின் அழகிய பெண்ணாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 

பரத் நடித்த ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன்பின்னர் அவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பிசாசு 2’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பூர்ணாவுக்கும், துபாய் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் நேற்று துபாயில் இவர்கள் திருமணம் நடந்து உள்ளது.

தனது திருமணம் குறித்து நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியபோது, ‘நான் இந்த உலகிலேயே அழகான பெண்ணாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஒரு நல்ல மனைவியின் பண்புகள் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் என்னை ஒருபோதும் குறைவாக உணரவில்லை. நான் யார் என்பதை புரிந்து கொண்டு என்னை நேசித்தீர்கள்.  என்னை ஒருபோதும் நீங்கள் மாற்ற முயற்சிக்கவில்லை. உங்களிடம் உள்ள மிகச்சிறந்த குணமான இதை நான் மிகவும் பெரிதாக பார்க்கிறேன்.

இன்று நமக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் நடந்தது. நாம் ஒரு நல்ல வாழ்க்கையை தொடங்குவோம். இதுதான் ஒற்றுமையின் அற்புதமான ஆரம்ப பயணம். இந்த பயணம் கொஞ்சம் அதிகமாக உள்ளது என்று எனக்கு தெரிகிறது. நான் உங்களுடன் இன்ப துன்பங்களில் பங்கேற்பேன் என்று உறுதி கூறுகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். பூர்ணாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.