பாட்டி, அம்மா, மகளுடன் நான்.. 4 தலைமுறையினர் புகைப்படத்தை வெளியிட்ட தமிழ் நடிகை..!

  • IndiaGlitz, [Sunday,February 18 2024]

சூர்யா, கார்த்தி உட்பட சில பிரபலங்களுடன் நடித்த தமிழ் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாட்டி, அம்மா, மகளுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 4 தலைமுறை பெண்கள் என பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

சூர்யா நடித்த ’மாஸ் என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு தொழில் அதிபர் நிதின் ராஜ் என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

நடிகை ப்ரணிதா அவ்வப்போது தனது கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது பாட்டி, அம்மா, மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து எங்கள் குடும்பத்தில் உள்ள நான்கு தலைமுறை பெண்கள் என கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ப்ரணிதா திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்ட நிலையில் தற்போது அவர் ஒரு கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நள்ளிரவில் ஹீரோ அழைத்து போகவில்லையெனில் படத்தில் இருந்து தூக்கி விடுவார்கள்: 'தசாவதாரம்' நடிகை..!

நள்ளிரவு 3 மணிக்கு ஹீரோ அழைத்தால் கூட அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் அடுத்த நாளே என்னை படத்திலிருந்து தூக்கி விடுவார்கள் என்றும்,

விமான பயணத்தின் போது திடீரென ஏற்பட்ட ஆபத்து.. உயிர் தப்பியது இப்படித்தான்: ராஷ்மிகாவின் புகைப்படம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விமான பயணம் செய்த போது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அப்போது தான் செய்த செயல் குறித்த புகைப்படத்தை அவர் தனது  சமூக வலைதளத்தில்

பட்டாசு இல்லை, அழைப்பிதழ் கூட இல்லை.. பசுமைத் திருமணம் செய்யும் 'இந்தியன் 2' நடிகை..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வரும் 'இந்தியன் 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை வரும் 21ஆம் தேதி திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணம் சுற்றுச்சூழலுக்கு

திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இல்லையா? தேசிய கட்சியுடன் கூட்டணி என தகவல்..!

வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அக்கட்சி தேசிய கட்சியுடன்

சன்னிலியோனுக்கு ஹால் டிக்கெட் அனுப்பிய உபி அரசு.. என்ன தேர்வு எழுத போகிறார்?

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு காவலர் தேர்வு எழுத உத்தர பிரதேச மாநில அரசு ஹால் டிக்கெட் அனுப்பி உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.