திருமணமாகி 25 ஆண்டுகள் கழித்து விவாகரத்தா? தமிழ் நடிகையின் கணவர் விளக்கம்!

  • IndiaGlitz, [Wednesday,November 23 2022]

தமிழ் திரையுலகில் கடந்த 90 களில் பிரபலமாக இருந்த நடிகை சிவரஞ்சனி தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக ஒரு சில யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவதை அடுத்து இது குறித்து அவரது கணவர் விளக்கமளித்துள்ளார்.

‘மிஸ்டர் கார்த்திக்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நடிகை சிவரஞ்சனி அதன் பின்னர் ’தலைவாசல்’ ’சின்னமாப்ளே’ ‘கலைஞன்’ ’தாலாட்டு’ ’அரண்மனை காவலன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இவர் கடந்த 1997ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் இவர்களது மகன் ரோஷன் தற்போது தெலுங்கு திரையுலகில் நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணம் நடந்து 25 ஆண்டுகள் கழித்து நடிகை சிவரஞ்சனி தனது கணவரை விவாகரத்து செய்ய போவதாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பணப்பிரச்சனை தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் சில தெலுங்கு யூடியூப் சேனலில் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிவரஞ்சனியின் கணவர் ஸ்ரீகாந்த் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற வதந்திகளை பரப்புவது யார் என்றே தெரியவில்லை. பணச்சிக்கல் காரணமாக நாங்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக பொய் செய்தியை பரப்பி வருகின்றனர். என்னிடம் எனது மனைவி வருத்தத்துடன் இந்த செய்தியை காட்டியபோது அதை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி இருக்கிறேன். இதுபோன்று ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு போடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நடிகை சிவரஞ்சனி விவாகரத்து செய்ய போவதாக வெளியான செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன்.. செம புகைப்படம் வைரல்

நடிகர் அஜித்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த புகைப்படம் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சன் டிவி சீரியல் நடிகைக்கு ஆண் குழந்தை.. கணவர் வெளியிட்ட புகைப்படம்!

சன் டிவி சீரியலில் நடித்த நடிகை சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவர் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

இன்னும் ஒரிரு நாளில் ரஜினி-அஜித் சந்திப்பு? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!

 இன்னும் ஒரு சில நாட்களில் ரஜினி - அஜித் சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கெளதம் கார்த்திக்கின் அம்மாவுக்கு இன்று ஸ்பெஷல் தினம்.. எப்படி வர்ணித்திருக்கிறார் பாருங்கள்..

நடிகர் கௌதம் கார்த்திக்கின் அம்மாவுக்கு இன்று பிறந்தநாளை அடுத்து அவர் பதிவு செய்திருக்கும் நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பழம்பெரும் இயக்குனரை கையை பிடித்து தலைகுனிந்து வணங்கிய கமல்ஹாசன்: வைரல் புகைப்படம்

பழம்பெரும் இயக்குனரின் கையை பிடித்து தலைகுனிந்து வழங்கிய கமல்ஹாசனின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.