புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட சோதனை.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Sunday,January 15 2023]

தமிழ் நடிகை ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நோய் அவரை தாக்கி உள்ளதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஷால் நடித்த ’சிவப்பதிகாரம்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை மம்தா மோகன் தாஸ். அதன் பிறகு அவர் ’குசேலன்’ ’குரு என் ஆளு’ ’தடையறத் தாக்க’ ’எனிமி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் ’கருமேகங்கள் கலைகின்றன’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மம்தா மோகன் தாஸ் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு தேறினார். இந்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென விட்டிலிகோ (Vitiligo) என்ற நோய் தன்னை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நோய் தோலின் நிறத்தை இழக்க செய்யும் வகையை கொண்டது என்றும், எனவே தான் கொஞ்சம் கொஞ்சமாக நிறத்தை இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளனர்.

மேலும் அவர் தன்னம்பிக்கையுடன் இந்த நோயை தான் எதிர்கொண்டு வருவதாகவும் சிகிச்சை பின் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மம்தா மோகன் தாஸின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்க்கு அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர் குறிப்பாக நடிகை ரெபா மோனிகா ஜான் ’நீங்கள் ஒரு போராளி, மிகவும் அழகாக இருக்கிறீர்கள், கண்டிப்பாக நீங்கள் இதிலிருந்து மீண்டு வருவீர்கள்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் பல ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் அளித்து அவர் நிச்சயம் மீண்டும் வருவார் என்று கூறி வருகின்றனர்.

More News

சூர்யாவுக்கு கதை சொன்ன பிரபல மலையாள இயக்குனர்: படப்பிடிப்பு எப்போது? 

 தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ஏற்கனவே பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் தற்போது கேரள முன்னணி இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்டு விரைவில் அந்த படத்தை

சமுத்திரக்கனியின் டீன் ஏஜ் மகளை பார்த்து இருக்கிங்களா? பாவாடை தாவணியில் என்ன ஒரு அழகு?

தமிழ் திரை உலகின் ,இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இவர் ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் மற்றும் குணசேத்திர கேரக்டரில் கலக்கி

வேஷ்டி சட்டையில் சிவகார்த்திகேயன் மகன்.. செம க்யூட் புகைப்படம்

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவக்கார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை பதிவு செய்த நிலையில்

விஜய்யின் 'வாரிசு' அம்மாவுக்கு 64 வயதில் 3வது திருமணமா?

விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா மூன்றாவது திருமணம் ரகசியமாக செய்து கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். 

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. பிரபல நடிகர் அறிவிப்பு!

கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை பிரபல