தமிழக கிரிக்கெட் அணியில் இடம்.. மகனை நினைத்து பெருமைப்படும் தமிழ் நடிகர்..!

  • IndiaGlitz, [Sunday,January 21 2024]

தமிழ் நடிகர் ஒருவர் தனது மகனுக்கு U-14 தமிழக கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது என பெருமையாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். தளபதி விஜய்யின் உறவினரான இவர் தற்போது ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விக்ராந்த் சிசிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பதும் இவர் உண்மையிலேயே ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விக்ராந்த் மகன் யாஷு என்பவர் தற்போது 14 வயதுக்கு உட்பட்ட தமிழக கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார். இது குறித்து புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, மகனை நினைத்து தனக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் எதிர்காலத்தில் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும் அதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து ரசிகர்கள் விக்ராந்த் மகனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

என் மாமியாரின் கனவு நனவானது: பிரதமர் மோடி சந்திப்பு குறித்து பிரபல நடிகை..!

சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்த நிலையில் பிரபல நடிகையின் மாமியார் அவரை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு எனது மாமியாரின் கனவு நினைவானது என்று குறிப்பிட்டுள்ளார்.  

'கேப்டன் மில்லர்' கதை பிரபல நடிகர் எழுதிய நாவலின் காப்பியா? அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வசூலிலும் திருப்திகரமாக இருப்பதாக

ஷகிலா - ஷீத்தல் மோதல்.. சமாதானம் செய்ய வந்த பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல்: போலீஸில் புகார்..!

நடிகை ஷகிலா மற்றும் அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் நடந்ததாகவும் இந்த மோதலை சமாதானம் செய்து வைக்க வந்த பெண் வழக்கறிஞர்கள்

நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் முதல் வாய்ப்பு: புதிய படத்தில் கமிட்டான பிக்பாஸ் 7 போட்டியாளர்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் பார்வையாளர்களிடம் இருந்து பெற்றவர்கள் மாயா மற்றும் பூர்ணிமா என்று சொல்லலாம்.

பிக்பாஸ் சரவணன் விக்ரம் எடுத்த அதிர்ச்சி முடிவு..என்ன காரணம்?

 பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த சரவணன் விக்ரம் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் நடிப்பில் இருந்து விலகுவதாக