தடுப்பூசி மட்டும் போடாமல் இருந்திருந்தால்? கொரோனா பாதித்த தமிழ் நடிகர் பேட்டி!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

கொரனோ தடுப்பூசி மட்டும் போடாமல் இருந்திருந்தால் தனது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்திக்கும் என பிரபல தமிழ் நடிகர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடுநிசி நாய்கள், மங்காத்தா, வேதாளம், உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் அஸ்வின். இவர் கடந்த ஏப்ரல் மாதம் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக தாக்கி வந்த நிலையில் தனக்கும் அதன் பாதிப்பு இருந்ததாக அஸ்வின் கூறியுள்ளார். கொரோனாவின் அறிகுறி தெரிந்தவுடன் பரிசோதனை செய்து கொண்டதாகவும் பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும், தனது மனைவி தான் தன்னையும் குழந்தையையும் கவனித்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தனக்கு பாதிப்பு குறைவாக இருந்ததாகவும் ஒருவேளை தடுப்பூசி போடாமல் இருந்தால் தனக்கு மிக அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதிலிருந்து மீண்டு விடலாம் என்றும் நடிகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

More News

102 டிகிரி காய்ச்சல்: தடுப்பூசி போட்டுக்கொண்ட பிக்பாஸ் பிரபலத்தின் பதிவு!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன

நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய 'நிலவே மலரே' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரகுமான். அதன் பின்னர் இவர் பாலச்சந்தரின் 'புதுப்புது அர்த்தங்கள்' என்ற படத்தின் மூலம் பிரபலமானார்

'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தில் பிரபாஸ்? இயக்குனர் அளித்த பதில்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிக்கும் 'மிஷன் இம்பாஸிபிள்' என்ற திரைப்படத்தின் 6 பாகங்கள் உலக அளவில் மிகப்பெரிய ஹிட்டாகிய நிலையில் தற்போது இந்த படத்தின் 7ஆம் பாகம் தயாராகி வருகிறது

கருப்பு, வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட மூன்று பூஞ்சை தொற்றுக்கள் பாதித்த நபர்...! அதிர்ந்துபோன மருத்துவர்கள்...!

மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றனர்

இந்த இயக்குனரின் மகன் இறந்ததும் PSBB பள்ளியில் தான்: திடுக்கிடும் தகவல்!

கடந்த இரண்டு நாட்களாக பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் விவகாரம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.