பிரதமர் மோடிக்கு உணவு கொடுப்பதை நிறுத்துங்கள்; தமிழ் நடிகரின் ஆவேச பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,February 22 2024]

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் பிரதமர் மோடிக்கு உணவு கொடுப்பதை நிறுத்துங்கள் என தமிழ் நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து தமிழ் நடிகர் கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விளைபொருளுக்கு நியாயமான விலை கேட்பது என்ன தவறா? ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலையை கொடுப்பேன் என்று கூறிய அரசியல்வாதிகள் விவசாயிகளை தேச துரோகிகள் போல் நடத்துகின்றன. இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்வது?

விவசாயிகளை தடுக்கும் நோக்கத்தில் சாலைகள் தோண்டப்பட்டன, தடுப்புகள் எழுப்பப்பட்டன, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன, இதை எல்லாம் செய்தது மோடி அரசுதான், அதுமட்டுமின்றி அவர்களை தேசத்துரோகிகள் என்றும் பேச தொடங்கியுள்ளனர்.

விவசாயிகளுக்கு எதிரான பொய்யான வதந்திகளை பரப்பும் பிரதமர் மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும். அவர்களுக்கு மட்டுமல்ல விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் உணவு கொடுக்க கூடாது, நமது விவசாயிகளை தேச துரோகிகள் என்ற முத்திரை குத்துபவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை என்று நடிகர் கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More News

இந்த வாரம் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.. ஆனாலும் சூப்பர் படம்: ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் அந்த படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன

மதுரை வீரன் தானே.. நயன்தாரா வீட்டுக்கு பாதுகாவலராக வந்த சாமி சிலை..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வீட்டுக்கு மதுரை வீரன் சிலை வந்த புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜயகாந்த் நினைவிடத்தில் மோகன்.. இருவரும் இணைந்து எத்தனை படத்தில் நடித்திருக்கிறார்கள்?

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமான நிலையில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தினந்தோறும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாட்டு அடி ஆட்டம் 𝚁𝙴𝙿𝙴𝙰𝚃... அடுத்த பட அப்டேட் கொடுத்த பிரபுதேவா..!

பிரபுதேவா நடித்துக் கொண்டிருந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நிலையில் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆன 'தாமிரபரணி' நாயகி.. மீண்டும் ஒரு ரவுண்டு வருவாரா?

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விஷால் நடித்த 'தாமிரபரணி' என்ற திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை பானு