ஆந்திரா, தெலுங்கானா வெள்ளம்.. நிவாரண நிதியை அள்ளிக் கொடுத்த மாஸ் தமிழ் நடிகர்..!

  • IndiaGlitz, [Tuesday,September 10 2024]

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வெள்ள நிவாரண நிதியாக தெலுங்கு திரை உலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கோடி கணக்கில் நிவாரண நிதி அளித்துள்ள நிலையில் முதல் முறையாக தமிழ் நடிகர் மாஸ் தமிழ் நடிகர் ஒருவர் தெலுங்கானா, ஆந்திரா வெள்ள நிவாரண நிதி அளித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் உடமைகளை பறிகொடுத்து முகாம்களில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தெலுங்கு திரை உலக பிரபலங்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். குறிப்பாக சிரஞ்சீவி, பாலையா, பிரபாஸ், மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிடோர் கோடி கணக்கில் நிதி அளித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிம்பு ஆந்திரா, தெலுங்கானா வெள்ள நிவாரண நிதியாக 6 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். தமிழ் நடிகர் ஒருவர் ஆந்திரா தெலுங்கானா வெள்ள நிவாரண நிதியாக கொடுத்துள்ளதை அடுத்து அவருடைய பெருந்தன்மையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

More News

உங்கள் ராசிக்கு எந்த முருகன் கோவிலுக்கு போக வேண்டும்.?

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் ஜோதிட நிபுணர் சுபம் D.R. விஜயகுமார் அளித்த சிறப்பு பேட்டி, 12 ராசிகளுக்கும் ஏற்ற முருகன் மற்றும் அம்மன் கோவில்களை அடையாளம் காட்டியுள்ளது.

'சூர்யா 44' படத்தில் 'கோட்' நடிகர்.. கார்த்திக் சுப்புராஜ் வேற லெவல் திட்டம்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர் விரைவில் 'சூர்யா 44 ' படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

என்னங்க இவ்வளவு காய்ஞ்சு போயா இருக்கீங்க.. சமீபத்திய சர்ச்சை குறித்து இயக்குனர் செல்வராகவன்..!

சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் மாணவிகள் மத்தியில் பேசியது பெரும் சர்ச்சை ஆகி உள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது

மனைவியிடம் இருந்து விவாகரத்து: குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி..!

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதற்கும் தயாராக இருக்க வேண்டும்: நடிகைகள் பாலியல் விவகாரம் குறித்து சன்னி லியோன்..!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக கடந்த பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு