திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பிரபல நடிகர்: அடுத்த பட வெற்றிக்காகவா?

  • IndiaGlitz, [Monday,February 07 2022]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நடித்த திரைப்படம் ஒன்று விரைவில் ரிலீசாக இருக்கும் போது நிலையில் அவர் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் அருண்விஜய் என்பதும் அவர் நடித்த ’யானை’ என்ற திரைப்படம் இன்னும் ஒரு சில வாரங்களில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு அதன் பின்னர் கிரிவலம் சென்றுள்ளார். திருவண்ணாமலை செல்வதை வழக்கமாக கொண்டுள்ள அருண் விஜய் தற்போது மீண்டும் சென்றுள்ளார் என்பதும் ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலை செல்லும் போது தனக்கு முழு மன அமைதி கிடைப்பதாகவும் நள்ளிரவில் கிரிவலம் செல்வது என்பது ஒருவிதமான உணர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது மற்றும் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இந்தநிலையில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள ’யானை’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது அக்னி சிறகுகள், ஓ மை டாக், பாக்சர், சினம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.