'கல்கி 2898 ஏடி' படத்தின் 2 கேரக்டர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்த தமிழ் நடிகர்.. யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,July 04 2024]

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் இரண்டு கேரக்டர்களுக்கு தமிழ் நடிகர் ஒருவர் டப்பிங் குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ நாராயணன் இசையில் உருவான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’ . இந்த படம் நான் 700 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பில் அமிதாப்பச்சனுக்கு குரல் கொடுத்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ் என்று தகவல் வெளியாகி உள்ளது. தனக்கு சிறுவயதில் இருந்தே அமிதாப் பச்சன் படம் பிடிக்கும் என்றும் தற்போது அவரது படத்திற்கு டப்பிங் செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் நடித்த கிருஷ்ணகுமார் என்பவருக்கும் அர்ஜுன் தாஸ் தான் குரல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து ஒரே படத்தில் நடித்த இரண்டு கேரக்டர்களுக்கும் அர்ஜுன் தாஸ் குரல் கொடுத்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இந்த தகவல் தற்போது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

தமிழ் நடிகை வீட்டில் திருட்டு.. வேலை செய்த பெண் உள்பட 2 பேர் கைது..!

பிரபல தமிழ் நடிகை வீட்டில் திருடு நடந்ததை எடுத்து அந்த வீட்டில் பணி செய்த பெண் உள்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ரெமோ' படத்தின் ரீமேக்கா? பிரபல நடிகரின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ரசிகர்கள் குழப்பம்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படத்தில் அவர் ஆண், பெண் என இரண்டு கெட்டப்புகளில் நடித்த நிலையில் தற்போது பிரபல  நடிகர் நடித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதேபோன்று காட்சி இருப்பதை

'மஞ்சும்மெல் பாய்ஸ்' போலவே இன்னொரு மலையாள படத்திற்கும் பிரச்சனை.. 'அழகிய லைலாவில்' என்ன நடந்தது?

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் 'மஞ்சும்மெல் பாய்ஸ்' மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் 'குணா' படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலை'

முதல்முறையாக இணையும் யுவன் ஷங்கர் ராஜா - சந்தோஷ் நாராயணன்.. எந்த படத்திற்கு தெரியுமா?

முதல் முறையாக பிரபல இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரித்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்கள்

'மகாநதி' சீரியலில் இருந்து விலகிய நடிகைக்கு திரைப்படத்தில் ஹீரோயின் வாய்ப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மகாநதி' சீரியலில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகைக்கு தற்போது திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.