முன்னாள் மனைவி அளித்த புகார்.. தமிழ் நடிகர் அதிரடி கைது..!

  • IndiaGlitz, [Monday,October 14 2024]

முன்னாள் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகர் பாலா காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் மற்றும் தமிழ்-மலையாள திரையுலகில் நடிகர் இன்று கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழில் அவர் அன்பு காதல், கிசுகிசு அம்மா, அப்பா செல்லம், கலைஞர், தம்பி, அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்; மேலும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். 2019 ஆம் ஆண்டில் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்ட நிலையில், அம்ருதா இசையமைப்பாளர் கோபி சுந்தர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், முன்னாள் மனைவி அம்ருதா தன்னை முன்னாள் கணவர் பாலா பின் தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், தனது மகளை துன்புறுத்துவதாகவும் புகார் அளித்த நிலையில், இன்று அதிகாலை பாலாவை காவல்துறையினர் கைது செய்தனர். இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பாலாவின் மேனேஜர் ராஜேஷ் மற்றும் நண்பர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ரவீந்தர் எவிக்சனை அடுத்து இந்த வாரம் குறிவைக்கப்பட்ட 4 பேர்.. நாமினேஷன் விபரங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷனில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்பட்டார். அவர் வெளியேறும்போது, அனைத்து போட்டியாளர்களையும்

'சிறகடிக்க ஆசை' முத்துவுக்கு நிச்சயதார்த்தம்.. க்யூட் வீடியோ வைரல்..!

'சிறகடிக்க ஆசை' சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் நிச்சயதார்த்தம் நேற்று நடந்த நிலையில், இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'கங்குவா' படத்தின் அனைத்து மொழிகளிலும் சூர்யா வாய்ஸ்.. எப்படி தெரியுமா?

சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம், தமிழ் உட்பட சுமார் 10 மொழிகளில் திரையரங்குகளில்  வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் சூர்யா குரல் திரையில் ஒலிக்க என தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது இந்த இயக்குனரா? அப்ப 'வாடிவாசல்' என்ன ஆச்சு?

சூர்யா நடிக்க இருக்கும் 46வது திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் கசிந்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'லப்பர் பந்து' நாயகி மீது போலீசார் வழக்குப்பதிவு.. புகார் கொடுத்ததும் ஒரு நடிகை தான்..!

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'லப்பர் பந்து' படத்தின் நாயகி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த புகாரை அளித்தது ஒரு பிரபல நடிகை என்றும்,