close
Choose your channels

முன்னாள் மனைவி அளித்த புகார்.. தமிழ் நடிகர் அதிரடி கைது..!

Monday, October 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகர் பாலா காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரர் மற்றும் தமிழ்-மலையாள திரையுலகில் நடிகர் இன்று கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழில் அவர் "அன்பு காதல்", "கிசுகிசு அம்மா", "அப்பா செல்லம்", "கலைஞர்", "தம்பி", "அண்ணாத்த" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்; மேலும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். 2019 ஆம் ஆண்டில் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்ட நிலையில், அம்ருதா இசையமைப்பாளர் கோபி சுந்தர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், முன்னாள் மனைவி அம்ருதா தன்னை முன்னாள் கணவர் பாலா பின் தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், தனது மகளை துன்புறுத்துவதாகவும் புகார் அளித்த நிலையில், இன்று அதிகாலை பாலாவை காவல்துறையினர் கைது செய்தனர். இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பாலாவின் மேனேஜர் ராஜேஷ் மற்றும் நண்பர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment