எனக்கும் ராஷி கண்ணாவுக்கு போட்டி என்பது உண்மைதான்.. தமன்னா கூறிய தரமான விளக்கம்..!

  • IndiaGlitz, [Friday,June 07 2024]

சமீபத்தில் வெளியான ’அரண்மனை 4’ திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் நடிப்பிலும் கிளாமரிலும் போட்டி போட்ட நிலையில் ’எங்கள் இருவருக்கும் போட்டி இருந்தது உண்மைதான்’ என சமீபத்தில் அளித்த பேட்டியில் தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்த ’அரண்மனை 4’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரது கேரக்டருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து சுந்தர் சி இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பாக அச்சச்சோ பாடலில் இருவருக்கும் சம அளவில் கிளாமர் கொடுத்தும் அந்த பாடலை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சமூக வலைதளத்தில் தமன்னா, ராஷி கண்ணா இருவரில் யார் நடிப்பு சிறப்பாக இருந்தது? யார் சிறப்பாக நடனம் ஆடினார்கள் என்ற வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.

’அரண்மனை 4’ படத்தின் போது எனக்கும் ராஷி கண்ணாவுக்கும் போட்டி இருந்தது உண்மைதான் என்றும் ஆனால் அந்த போட்டி ஆரோக்கியமாக இருந்தது என்றும் அவர் கூறினார். ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் நடித்தால் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், இரண்டு நடிகைகளுக்கும் போட்டி என்று தான் பேசுவார்கள், அது இயல்பானது தான் என்று கூறினார்.

என்னை பொருத்தவரை நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன், ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். ’அரண்மனை 4’ படத்தில் நானும் ராஷி கண்ணாவும் ஒரு பாடலில் சேர்ந்து நடனம் ஆடினாலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக தான் இருந்தோம், அந்த போட்டியும் ஆரோக்கியமாக இருந்தது’ என்றும் அவர் கூறினார்.