'அரண்மனை 4' படத்திற்காக இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்தாரா தமன்னா?  டூப் இல்லாமல் செய்த ஸ்டண்ட்கள்..!

  • IndiaGlitz, [Saturday,April 27 2024]

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா நடிப்பில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் வரும் மே 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’அரண்மனை 4’ படமும் அதே போல் வரவேற்பை பெறுவது மட்டுமின்றி வசூலையும் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் போட்டி போட்டு ஆடிய பாடல் காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் போது தனக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் காட்சியின் வீடியோவும் இருக்கும் நிலையில் அதை பார்த்து ரசிகர்கள் ’அரண்மனை 4’ படத்திற்காக தமன்னா இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து உள்ளாரா என்ற கேள்வியை ஆச்சரியத்துடன் எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த பதிவில் தமன்னா ’அரண்மனை 4’ திரைப்படம் ரசிகர்களை அலற வைத்து பயமுறுத்தும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த படத்திற்கு பின் உள்ள சில இனிமையான தருணங்களை உங்களுக்கு பகிர்ந்து உள்ளேன். இந்த படத்தில் பணி புரிந்தது சவால் ஆனதாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் இந்த ஸ்டண்ட்களை எல்லாம் நானே ரிஸ்க் எடுத்து செய்து முடித்தேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

தமன்னாவின் இந்த பதிவு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு செய்யப்பட்ட நிலையில் அதற்குள் கிட்டத்தட்ட 4 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

6 புதிய கோமாளிகளுடன் கோலாகலமாக ஆரம்பித்த குக் வித் கோமாளி.. முதல் எபிசோட் எப்படி இருக்கு?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் இன்று ஐந்தாவது சீசனின் முதல் எபிசோட் வெளியாகியுள்ள நிலையில் இந்த எபிசோடு

உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகும் 'ராபர்' .. சிவகார்த்திகேயன் வெளியிட்ட போஸ்டர்..!

சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின்  பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார்.

இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட சங்கடம் தீரும் (சித்திரை 14, ஏப்ரல் 27)

சென்னை, ஏப்ரல் 27: இன்று சித்திரை மாதம் 14 ஆம் தேதி, சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளில் விநாயகரை வழிபட்டால், சகல துன்பங்களும் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.

விஜய் பிறந்த நாளில் வரும் 'கோட்' அப்டேட் இதுதான்.. ரசிகர்கள் உற்சாகம்..!

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

மே 1ஆம் தேதி அஜித்தின் 2 படங்கள் ரீரிலீஸ்.. ஆனாலும் 'மங்காத்தா' மிஸ் ஆகுதே..!

விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அஜித் ரசிகர்களும் 'பில்லா' 'மங்காத்தா' உட்பட சில படங்களை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை