சமந்தா, நயன்தாரா பாணியை பின்பற்றும் தமன்னா

  • IndiaGlitz, [Wednesday,January 20 2016]

நடிகை தமன்னா இதுவரை தான் நடித்த படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ் மூலம் டப்பிங் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது தர்மதுரை' படத்திற்காக அவரே தன்னுடைய சொந்தக்குரலில் டப்பிங் செய்யவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


கோலிவுட் திரையுலகில் நடிகைகளே டப்பிங் செய்யும் வழக்கம் மீண்டும் உருவாகி வருகிறது. '10 எண்றதுக்குள்ள படத்தில் சமந்தா, 'மாயா' படத்தில் நயன்தாரா ஆகியோர் சொந்தக்குரலில் டப்பிங் பேசிய நிலையில் இவர்களை அடுத்து தற்போது தமன்னாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வரும் தமன்னா, இந்த படத்தில் தன்னுடைய கேரக்டரின் முக்கியத்துவம் கருதியும், இயக்குனரின் வேண்டுகோளை ஏற்றும் சொந்தக்குரலில் டப்பிங் பேச சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. தமன்னாவின் அழகையும் நடிப்பையும் மட்டுமே ரசித்து வந்த அவரது ரசிகர்கள் இனி அவரது சொந்தக்குரலை கேட்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் இணையும் மணிரத்னம்-கமல்ஹாசன்

சமீபத்தில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து தற்போது பெங்களூர்...

நடிகர் சங்க கணக்குகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. முன்னாள் பொருளாளர் சந்திரசேகர்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றபோது...

இன்று மாலை ஜி.வி.பிரகாஷின் சூப்பர் ஸ்டார் டைட்டில்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் '2.0' என்ற பிரமாண்டமான படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம்...

'பெங்களூர் நாட்கள்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா, ராய்லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்த 'பெங்களூர் நாட்கள்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து ...

சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதியின் அடுத்த படபூஜை

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...