நடிகை தமன்னாவின் எழுத்தாளர் அவதாரம்… வியந்து கொண்டாடும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா தற்போது எழுத்தாளராக மாறியிருக்கிறார். இவர் எழுதியிருக்கும் முதல் புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் புது முயற்சியைப் பார்த்த ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என பலருடன் இணைந்து நடித்திருக்கும் நடிகை தமன்னா தெலுங்கு சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட் சினிமாவில் “ஹிம்மத்வாலா“, “எண்டெர்டெய்மெண்ட்“, “ஹம்ஷகல்ஸ்”, “துடக் துடக் துடியா” போன்ற வெற்றிப் படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “நவம்பர் ஸ்டோரிஸ்” எனும் வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டரில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நடிப்பைத் தவிர உடற்பயிற்சி, வொர்க்அவுட், உணவுமுறை எனப் பலவற்றிலும் கவனம் செலுத்திவரும் நடிகை தமன்னா தற்போது பண்டையகால வாழ்க்கை முறையை பற்றி பேசும் “பேக் டூ தி ரூட்ஸ்” எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தை Lifestyle பயிற்சியாளர் லூக் காவ்டின்ஹோ என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார். மேலும் இந்தப் புத்தகத்தைப் பற்றி கருத்துப் பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னா, இது என்னுடைய முதல் புத்தகம். அதனால் மிகவும் நம்புகிறேன்.

நம்மில் பலர் தற்போது துரிதமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகின்றனர். அதனால் நமக்கு தேவைப்படுவது எல்லாம் பண்டைய கலாச்சார அறிவுடைய வாழ்க்கை முறைதான். அதை இந்தப் புத்தகம் வெளிப்படுத்தி இருக்கிறது. இந்தப் புத்தகம் பரவலாக வாசிக்கப்பட வேண்டும். நமது வாழ்வியலை முறையாகக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து உள்ளார்.

More News

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

விமர்சனங்களை தாண்டி, 20 வயதில் சாதிக்கும் சீரியல் நடிகை....!

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிவரும் "காற்றுக்கென்ன வேலி" சீரியலின் நாயகிதான் நடிகர் பிரியங்கா குமார்.

பாடபுத்தகங்களில்  தமிழர்கள் வரலாற்றை அவதூறாக காண்பிக்கிறார்கள்....!சீமான் காட்டம்....!

பாடபுத்தகங்களில்  இடம்பெற்றுள்ள தமிழர்கள் வரலாறு அவதூறாக உள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகவே திட்டமிட்டு

போதைப்பொருள் விவகாரம்… நடிகை சஞ்சனா கல்ராணி சிறைக்கு செல்கிறாரா?

பாலிவுட் சினிமா உலகில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னரே போதைப்பொருள் விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியது

வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சல்: பணமோசடி விவகாரம் குறித்து ஆர்யா

பிரபல நடிகர் ஆர்யா மீது ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் பணமோசடி புகார் அளித்திருந்த நிலையில் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.