யூடியூபர் இர்பானுக்கு கருணை காட்ட வேண்டாம், நடவடிக்கை எடுங்கள்: பிரபல அரசியல் கட்சி தலைவர்..!

  • IndiaGlitz, [Tuesday,May 28 2024]

பிரபல யூடியூபர் இர்பான் சமீபத்தில் தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த நிலையில் இது பெரும் சர்ச்சையானது.

இதையடுத்து தமிழக அரசின் மருத்துவத்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் அதன் பின்னர் இர்பான் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டதை அடுத்து நடவடிக்கை கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ள இர்பானுக்கு கருணை காட்டாமல் உரிய சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழக அரசு மீண்டும் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது ஏற்கனவே எடுத்த முடிவின் படி உறுதியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் துபாய் சென்றிருந்த இர்பான் அங்குள்ள ஸ்கேன் சென்டரில் தனது மனைவிக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை ஒரு விழாவாக கொண்டாடி வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவால் தான் தற்போது அவர் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பகத் பாசிலுக்கு வந்த அபூர்வ நோய்.. 41 வயதில் குணமாக வாய்ப்பு இருக்கின்றதா?

பிரபல நடிகர் பகத் பாசிலுக்கு அபூர்வ நோய் ஏற்பட்டுள்ள நிலையில் அவருடைய வயதுக்கு இந்த நோய் முழுமையாக குணமடையுமா என்று மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

'காதலிக்க நேரமில்லை' படப்பிடிப்பு நிறைவு.. அடுத்தடுத்த அப்டேட்டுகள் எப்போது?

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"

ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சு போச்சு.. கதவை சாத்திய ஸ்ருதிஹாசன்.. !

நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து 'இனிமேல்' என்ற ரொமான்ஸ் ஆல்பத்தை வெளியிட்ட நிலையில் அவருடைய அடுத்த ஆல்பத்தில் 'கதவை சாத்தி விட்டேன்,

இரட்டை வேடம் இல்லை.. அதுக்கும் மேல.. 'கோட்' படத்தின் ட்விஸ்ட்.. ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படத்தில் அவர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்பட்டது.

இந்திய திரையுலகில் யாரும் வாங்காத சம்பளமா? அட்லியை வளைத்து போட்ட அஜித் பட நிறுவனம்..!

அஜித் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இதற்காக அட்லிக்கு இந்நிறுவனம் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பேசி முடித்திருப்பதாகவும் கூறப்படுவது