இந்தியாவை கழற்றிவிட்டு, அரைஇறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் “கோப்பை“ எங்களுக்குத்தான் என்று உற்சாகத்துடன் களம் இறங்கிய இந்திய அணி தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியேறி இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அரைஇறுதிக்குள் நுழைந்து வெற்றியைக் கொண்டாடி வருகிறது.

டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 “பி“ அணியில் இடம்பெற்ற பாகிஸ்தானுடன் விளையாடிய இந்தியா முதல் போட்டியிலேயே படுதோல்வி அடைந்தது. அடுத்து நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியிலும் தோல்வி. இதனால் துவண்டுபோன இந்திய ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடி நல்ல ரன் ரேட்டிங்கை வைத்திருந்ததால் ஒரு சிறிய நம்பிக்கையுடன் வலம் வந்தனர்.

அந்த அடிப்படையில் நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெறும் போட்டியில் தோல்வியடைய வேண்டும், அப்படி நடக்கும் பட்சத்தில் ரன் ரேட்டிங் அடிப்படையில் இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்துவிடலாம். இதுவே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் கனவாக இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மாஸ் வெற்றிப் பெற்று தற்போது அரைஇறுதிக்குள் நுழைத்துவிட்டது.

இதையடுத்து குரூப் “பி“ பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் குரூப் “ஏ“ பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும் முன்னேறியுள்ளன.

இந்நிலையில் இந்தியா அரைஇறுதி வாய்ப்பை நழுவவிட்டதையடுத்து, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் கடும் வருத்ததை வெளியிட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் தோல்விக்கு காரணம் காட்டி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதான விமர்சனங்களும் அதிகரித்து இருக்கின்றன.

More News

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.

கனமழை எதிரொலி: சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்!

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

வடகிழக்கு பருவமழை மாற்றம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அக்சராவை கேப்டனாக விடாமல் தலையை உடைத்த சிபி!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்றும் அதற்கான டாஸ்க் வைக்கப்படும் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் வைக்கப்படும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன

நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு

நாளை சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.