அபூர்வமாக அறிவுபூர்வமாக பேசும் ஒருசிலரில் சிம்பு ஒருவர்: பாஜக பிரமுகர்

  • IndiaGlitz, [Monday,January 28 2019]

நடிகர் சிம்பு கடந்த சில நாட்களாக தெரிவித்து வரும் கருத்துக்கள் முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். தனது கட் அவுட்டிற்கு பால் ஊற்ற வேண்டாம் என்று ஒரு வீடியோவிலும், இன்னொரு வீடியோவில் அண்டா அண்டாவாக பால் ஊற்றுங்கள் என்றும், அண்டாவில் பால் காய்ச்சி ஏழைகளுக்கு கொடுக்க சொன்னேன், கட் அவுட்டில் ஊற்ற சொல்லவில்லை என்று ஒரு பேட்டியிலும் சிம்பு கூறி வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தள பயனாளி ஒருவர் சிம்புவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது கருத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

ரூ.40 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகும் இளம்கதா நாயகன் சிம்புவை கலாய்ப்பதாக நினைத்து அபத்தமாக போடப்பட்ட பதிவின் எதிர்வினையே சிம்புவின் பதில். சினிமாவில் இருக்கும் சிலர் அபூர்வமாக அறிவுபூர்வமாக பேசினால் உணர்சிமிகுதியில் அதிர்ச்சி அடைகிறார்கள். எனது முழு ஆதரவு சிம்புவிற்கே' என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.