நித்தியானந்தாவின் 'கைலாஷ்' நாட்டிற்கு எஸ்.வி.சேகர் பிரதமரா?

  • IndiaGlitz, [Friday,December 13 2019]

கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் இம்மாதம் 18-ம் தேதிக்குள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் பெங்களூரு காவல் துறைக்கு உத்தரவிட்டு உள்ளது

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கொண்டே வீடியோ மூலம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வரும் நித்தியானந்தா, தான் கைலாஷ் என்ற நாட்டை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த நாட்டில் குடிமகனாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்றும், இந்நாட்டின் குடிமகனாக இந்து என்ற ஒரே ஒரு தகுதி போதும் என்றும் அறிவித்துள்ளார்

இந்த நிலையில் இது குறித்து நடிகர் எஸ்வி சேகர் கூறியபோது ’நித்யானந்தாவின் கைலாஷ் நாட்டிற்கு பிரதமர் பதவியை எனக்கு கொடுத்தால் தான் அவ்வப்போது வந்து பிரதமர் பதவியை கவனித்துக் கொள்ள தயார் என்றும் தனக்கு மனைவி குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகள் இருப்பதால் தன்னால் முழுநேரமாக பிரதமர் பதவியில் ஈடுபட முடியாது என்றும் எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்

கைலாஷ் என்ற நித்தியானந்தா அறிவித்த நாடே போலியானது என்று ஏற்கனவே ஈக்வடார் தூதரகம் மற்றும் ஈக்வடார் அரசு அறிவித்துள்ள நிலையில் இல்லாத ஒரு நாடான கைலாஷ் நாட்டின் பிரதமராக தான் தயார் என எஸ் வி சேகர் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் டுவிட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது எழுபதாவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய நிலையில் அவருக்கு தமிழ் திரையுலகில் இருந்து மட்டுமன்றி இந்திய திரையுலகினர்களும்

எனக்கும் மோசமாக பேசத்தெரியும்: சீமானுக்கு மீண்டும் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், யாரையும் வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று சீமானை மீண்டும் ராகவா லாரன்ஸ் விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

நித்தியானந்தாவை கண்டுபிடிக்க நீதிமன்றம் கெடு: அதிர்ச்சியில் போலீசார்! 

பெங்களூரு நித்யானந்தா ஆசிரமத்தில் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வந்தனர்.

பூந்தமல்லி பள்ளியில் ஏற்பட்ட சர்ச்சை: தளபதி 64 படத்துக்கு சிக்கலா?

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் மட்டும் சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்றது.

யார் இந்த பையன்? தமன்னாவை ஆச்சரியமடைய செய்த புதுமுக நடிகர்

சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான 'பெட்ரோமாக்ஸ்' படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே