எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,May 10 2018]

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகருக்கு பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பத்திரிகையாளர்கள் சார்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த புகாரின்பேரில் எஸ்.வி.சேகர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஒத்தி வைத்த ஐகோர்ட், எஸ்.வி.சேகரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று போலீசாருக்கு கேள்வி எழுப்பியது.

இருப்பினும் இன்று வரை எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு சற்றுமுன்னர் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் நடிகர் எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கோலி சோடா 2 ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் இயக்கிய 'கோலி சோடா 2' திரைப்படம் மே மாதம் 18ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடந்து வருகிறது.

மலேசியா தேர்தல்: 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்தது எதிர்க்கட்சி

நேற்று மலேசியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடித்து 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது மகதீர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி

விஷாலின் 'இரும்புத்திரை': முதல் பாதியின் விமர்சனம்

மோசடியாக பணம் சம்பாதிப்பவர்கள், வங்கியை ஏமாற்றி லோன் வாங்குபவர்களிடம் இருந்து பணத்தை இண்டர்நெட் மூலம் கொள்ளையடிக்கின்றது ஒரு கும்பல்.

நெடுவாசல் திட்டம் ரத்து: போராட்டக்காரர்களுக்கு விஷால் வாழ்த்து

விவசாய நிலங்கள் அடங்கிய நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு ஆரம்பிக்கும் முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புக்குரல் வெளிப்பட்டது.

தோல்வி அடைந்தாலும் அரசியலில் தொடர்வேன்: கமல்ஹாசன்

அரசியலில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து நீடிப்பேன் என்று நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தார்.