சூர்யா நடத்தும் தடுப்பூசி முகாம்: யாருக்காக தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மத்திய மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து ஏராளமான மக்கள் தினந்தோறும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர் என்பதும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தற்போது பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்த இருக்கிறார். இந்த தடுப்பூசி முகாமில் 2டி நிறுவனம் தயாரிக்கும் படங்களில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களுக்கு தடுப்பூசி போடப்படும். சென்னை மாநகராட்சியுடன் 2டி நிறுவனம் இணைந்து நடத்தும் இந்த தடுப்பூசி முகாம் ஜூலை 6 மற்றும் 7 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும் இந்த இரண்டு நாட்களில் 2டி நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா ஆகிய இருவரும் சமீபத்தில் தடுப்பூசி போட்டு கொண்டனர் என்பதும் அதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.

More News

பழம்பெரும் அரசியல்வாதியின் 100வது பிறந்த நாள்: இயக்குனர் பாரதிராஜாவின் நெகிழ்ச்சியான அறிக்கை!

பழம்பெரும் அரசியல்வாதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகருமான என்.சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த நாள் வரும் 15ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அவருடன் நெருங்கி பழகியவர்களில்

விராட் கோலி நெஞ்சில் சாய்ந்த வில்லியம்சன்… இறுதிப்போட்டி குறித்து மனம் திறந்த பேட்டி!

சவுதாம்படனில் நடைபெற்ற உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8

ஜாதித்தீவாக மாறும் சென்னை ஐஐடி....! வேலையை ரிசைன் செய்வதாக பேராசிரியர் கடிதம்...!

நாட்டில் மாபெரும் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐ.ஐ.டி கருதப்படுகிறது. இங்கு பணிபுரிய வேண்டும் என்றும், படிக்கவேண்டும் என்பதும் பலரின் கனவாகவே இருந்து வருகிறது.

19 வருட உலகச் சாதனையை முறியடித்த இந்தியச் சிறுவன்… செஸ்ஸில் இன்னொரு புது வரவு!

செஸ் விளையாட்டிற்குப் பெயர்போன விஸ்வநாதன் ஆன்ந்த் இந்தியாவை சேர்ந்தவர் என்ற முறையில் நாம் பெருமைப்பட்டு கொள்கிறோம்.

10 வருடமா கல்லறைக்கு விசிட் அடிக்கும் பெண்மணி? விசித்திரம் கொண்ட அதன் பின்னணி!

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் 48 வயதான பெண்மணி ஒருவர் கடந்த 10 வருடங்களாகத் தொடர்ந்து ஒவ்வொரு