இந்த படம் எனக்கு அனைத்தையும் கொடுத்தது.. 20 வருடங்களுக்கு முன் ரிலீஸான படம் குறித்து சூர்யா நெகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Wednesday,August 02 2023]

20 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படம் எனக்கு அனைத்தையும் கொடுத்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

சூர்யா, ஜோதிகா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியான திரைப்படம் ’காக்க காக்க’. கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் சூர்யாவின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை கொடுத்தது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்புச்செல்வன் என்ற ஐபிஎஸ் அதிகாரியாக இந்த படத்தில் சூர்யா நடிப்பில் மிரட்டி இருப்பார் என்பதும் இந்த படத்தின் போது தான் சூர்யாவுக்கும் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஜீவாவின் வில்லத்தனம், ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை இந்த படத்தின் பிளஸ்களாக இருந்தது.

இந்த நிலையில் ’காக்க காக்க’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்த படம் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது: இந்த படம் எனக்கு அனைத்தையும் கொடுத்த படம். அன்பு செல்வன் எப்போதும் என் மனதிற்கு நெருக்கமானவர். இந்த படத்தை பற்றி என்னிடம் முதலில் பேசிய ஜோதிகா மற்றும் எனது சக நடிகர்கள் தொழில்நுட்ப அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.