நான் என்றுமே உங்கள் விதைதான்: பிரபல இயக்குனருக்கு நன்றி கூறிய சூர்யா!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

’சூரரைப்போற்று’ படத்தில் சிறப்பாக நடித்த சூர்யாவுக்கு கடந்த சில நாட்களாக பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் சூர்யாவை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த் அவர்கள் நீண்ட கடிதம் ஒன்றை எழுதி பாராட்டு தெரிவித்துள்ளார்

இந்த பாராட்டுக்கு பதிலளித்துள்ள நடிகர் சூர்யா ’நான் என்றுமே நீங்கள் விதைத்த விதைதான்’ என்றும் உங்கள் பாராட்டு அவ்வளவு சந்தோஷம் தருகிறது என்று கூறி, ‘ரொம்ப ரொம்ப நன்றி சார்’ என்று தெரிவித்துள்ளார்

முன்னதாக இயக்குனர் வசந்த் தனது சமூக வலைத்தளத்தில் சூர்யாவின் நடிப்பு குறித்து கூறியதாவது:

அன்புள்ள சூர்யாவுக்கு...

இந்த பாராட்டு கடிதம்‌ உனக்கு இல்லை... நெடுமாறன்‌ இராஜாங்கத்திற்குதான். இந்த படத்தில் நீ உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறாய்‌! தமிழ்த்திரையுலகில்‌ என்‌ மூலம்‌ நிகழ்ந்த உன்‌ அறிமுகத்திற்க்கு பிறகு கொஞ்சம்‌ கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு, மிகச்சிறப்பாக உன்‌ நடிப்பை இதுவரை பல படங்களில்‌ வெளிப்படுத்தியிருந்தாலும்‌ இது இதுதான்‌ உன்‌ உச்சம்‌! இப்போதைக்கு!!!

நெடுமாறன்‌ இராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை இரத்தமும்‌ சதையுமாக உணர்ந்து வாழ்ந்‌திருக்கிறாய்‌. முதல்‌ காட்சியின்‌ ஆரம்பம்‌ கூட பரவாயில்லை. இறுஇயில்‌ நீ வென்ற பிறகு கூட உன்‌ முகத்தில்‌ சிரிப்பு இல்லை. அந்த தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும்‌ என்ற வெறி உன்‌ கண்களில்‌ இறுதிவரை தெரிகிறது. கணல்‌ மணக்கும்‌ பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும்‌ நெடுமாறன்‌ தோற்கும்‌ போது ஒவ்வொரு காட்சியிலும்‌ ஜெயிக்கிறது உன்‌ நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும்‌ எதார்த்தமாக துளி மிகையில்லாமல்‌ ஒரு கதாபாத்திரத்திற்க்கு மிகச்சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்‌. உன்‌ வெற்றியின்‌ பெருமிதத்தில்‌ நான்‌ ஒரு தொப்பியை மாட்டிக்கொண்டு சொல்‌கிறேன்

என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்து விட முடியும்,‌ ஏனென்றால்‌ என்‌ விதை நீ, என்‌ விருட்சம்‌ நீ, எனக்கு எத்தனை பெருமிதம்‌ என்று எழுத முடியாது என உச்‌சி முகந்து உச்சமுகந்து மகிழ்‌கிறேன்’ என்று கூறியிருந்தார்.

More News

கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்!!!

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா? எனக் கேலியாக ஒரு பழமொழி நம்ம ஊர் வழக்கத்தில் உண்டு.

வீடு வீடாக கஞ்சா சப்ளை செய்த கும்பல்… போலீஸ் வேட்டையில் பிடிபட்ட சம்பவம்!!!

மதுரை அவனியா புரத்தில் வீடு வீடாக சென்று அங்குள்ள இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த கும்பல் பிடிபட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை… சென்னைக்கும் பாதிப்பா?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை மற்றும் லேசான மழைபொழிவு இருந்து வருகிறது.

எங்க வீட்டு மாடியிலதான் கீர்த்திசுரேஷ் இருக்காங்க: விஜய் நண்பரின் மனைவி!

தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தன்னுடைய வீட்டின் மாடியில் தான் கீர்த்தி சுரேஷ்

'I am Back'ன்னு சொல்லுங்க: தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர்!

பிரபல குணசித்திர நடிகர் தவசி அவர்கள் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.