நாங்கள்‌ எங்கள் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்: தஞ்சை கோவில் சர்ச்சை குறித்து சூர்யாவின் அறிக்கை

  • IndiaGlitz, [Tuesday,April 28 2020]

கடந்த சில நாட்களாக ஜோதிகா பேசிய தஞ்சை பெரிய கோவில் குறித்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சூர்யா ஒரு அன்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

'மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை' என்கற கருத்து 'சமூக ஊடக' விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌. ஒரு விருது வழங்கும்‌ விழாவில்‌ எப்போதோ ஜோதிகா அவர்கள்‌ பேசியது, இப்போது ஊடகங்களில்‌ செய்தியாகவும்‌, சமூக ஊடகங்களில்‌ விவாதமாகவும்‌ மாறி இருக்கிறது.

'கோவில்களைப்‌ போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ உயர்வாக கருத வேண்டும்‌' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, பலர்‌' குற்றமாக பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்‌ போன்ற ஆன்மீகப்‌ பெரியவர்களே சொல்லியிருக்கறார்கள்‌. 'மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்‌ செலுத்தும்‌ காணிக்கை' என்பது 'திருமூலர்‌' காலத்து சிந்தனை. நல்லோர்‌ சிந்தனைகளைப்‌ படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ இறைவன்‌ உறையும்‌ இடமாக கருத வேண்டும்‌ என்ற கருத்தை, எல்லா மதத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ வரவேற்கவே செய்கின்றனர்‌. 'கொரானா தொற்று' காரணமாக இயல்பு வாழ்க்கைப்‌ பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும்‌, எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும்‌, மகிழ்ச்‌சியையும்‌ அளித்தது.

அறிஞர்கள்‌, ஆன்மீகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. 'மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌' என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌. தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாக சிலர்‌ அவதூறு பரப்பும்‌ போதெல்லாம்‌, நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்கு துணை நிற்கிறார்கள்‌. முகமறியாத எத்தனையோ பேர்‌ எங்கள்‌ சார்பாக பதில்‌ அளிக்கிறார்கள்‌. ஊடகங்கள்‌ சரியான விதத்தில்‌ இச்சர்ச்சையைக்‌ கையாண்டன. 'நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்‌' என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்‌ செய்கிறார்கள்‌. எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்‌ அனைவருக்கும்‌ எங்களின்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌.

இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

More News

எல்லா கேள்விகளும் பெண்களுக்கு மட்டும்தானா? அமலாபால் ஆவேச கேள்வி

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகைகளில் ஒருவரான அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எல்லாம் பெண்களை நோக்கியே வருவதாகவும் ஆண்களிடம்

'பொன்மகள் வந்தாள்' விவகாரம்: கலைப்புலி எஸ் தாணுவின் வேண்டுகோள்

ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் நேரடியாக ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸ் ஆகவிருப்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மற்றும் அவரை சேர்ந்தவர்களுக்கு தடை விதித்து இருப்பது குறித்து எஸ் தாணு

கடவுளே எனக்கு பதில் அளித்துவிட்டார்: ஹரிஷ் கல்யாண் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று அதன் பின்னர் திரையுலகில் தொடர் வெற்றியை பெற்று வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தாராளப் பிரபு'

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த உலகப் பிரபலங்கள்!!!

உலகில் பல முக்கிய அரசியல் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

பிளாஸ்மா சிகிச்சை இதற்குமுன் எந்த நோய் சிகிச்சைக்குப் பயனளித்தது??? கொரோனாவில் இது சாத்தியமா???

தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்