ஒரு படத்தோட வசூல் எவ்வளவுங்கிற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம்.. சூர்யா அறிவுரை..

  • IndiaGlitz, [Monday,September 23 2024]

ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள், ஒரு படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம் என்று நடிகர் சூர்யா, மெய்யழகன் படத்தின் விழாவில் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் தயாரிப்பில், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த மெய்யழகன் திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருப்பதை முன்னிட்டு, இதற்கான ப்ரோமோஷன் விழா நேற்று நடைபெற்றது.

அதில் சூர்யா பேசும் போது, ஒரு படத்தை படமாக மட்டும் பாருங்கள். வணிக ரீதியாக எவ்வளவு வசூல் செய்தது, எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்ற பிரச்சனை உங்களுக்கு வேண்டாம். தயவுசெய்து அது உங்களுக்கு தேவையில்லை.

இந்த படத்தை கொண்டாடுவதற்காகவே நான் தயாராக இருப்போம். படத்தை மட்டும் பாருங்கள். விமர்சனத்தில் அதிக ஆர்வம் காட்ட வேண்டாம். இந்த மாதிரியான படங்கள் அபூர்வமாகவே கிடைக்கும். எனவே, வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் 'மெய்யழகன்' படத்தை பார்த்து ரசிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

சூர்யாவின் இந்த அறிவுரை குறித்த வீடியோ, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஒரு படம் வெளியான உடனேயே சினிமா டிராக்கரக்ள் முதல் நாள் எவ்வளவு வசூல், இரண்டாம் நாள் எவ்வளவு வசூல் என்பவற்றை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சமீபகாலமாக, இந்த தகவல்களை சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்களே வெளியிட்டு வருகின்றனர். ஆனால் அந்த தொகை குறித்த நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

More News

அத்தான்.. உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? கார்த்தியின் 'மெய்யழகன்' டிரைலர்..!

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடித்த "மெய்யழகன்" திரைப்படம் வரும் 27 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்க இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரல்

சினிமாவில் சாதிக்க முடியாதவர்களால் தோல்வி அடையும் திரைப்படங்கள்.. பார்த்திபன் ஆதங்கம்..!

சினிமாவில் சாதிக்க முடியாதவர்கள், ஒரு கேமராவை தூக்கி வைத்து, விமர்சனம் என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்றும், அந்த வகை வீடியோக்களே

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கும் தேதி இதுவா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில், எட்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று ஏற்கனவே பார்த்தோம். இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து

த்ரிஷாவுக்கு லிப்கிஸ் கொடுத்த இளைஞர்.. இந்த ஏஐ இன்னும் என்னவெல்லாம் செய்ய போகுதோ?

நடிகை த்ரிஷாவுக்கு இளைஞர் ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்று உருவாக்கிய ஏ.ஐ. வீடியோ இணையத்தில் பரவுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்ட நடவடிக்கை எடுப்பேன்: இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை.. என்ன காரணம்?

இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: