அருமையான சினிமா ஒரு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே உருவாகிறது.. நன்றி சொன்ன சூர்யா

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

ஒரு அருமையான சினிமா அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே கிடைக்கும் என்று நடிகர் சூர்யா இன்று வெளியான ‘மெய்யழகன்’ படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘மெய்யழகன்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் ஒரு நெகட்டிவ் விமர்சனம் கூட இந்த படத்திற்கு வரவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இந்த படம் நிச்சயம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிய இந்த படம் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

ஒரு படம் பொதுவாக மிகுந்த கணக்குகள், செலவுகள் மற்றும் அதிகமான காதலுடன் உருவாக்கப்படுகிறது... ஆனால் தூய சினிமா ஒரு அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே உருவாகிறது. மெய்யழகன் உடன் பல அதிசயங்கள் நடந்துள்ளன என நம்புகிறேன்.

அனைவரின் பெரும் அன்புக்கும், விமர்சனத்திற்கு நன்றி... இது அனைத்தும் இந்த படத்தின் திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி. நன்றி பிரேம், நன்றி அர்விந்த்சாமி சார், நன்றி கார்த்தி, நன்றி கோவிந்த், நன்றி அனைத்து நடிகர் மற்றும் தொழிலாளர்களுக்கு.

More News

கடலுக்கும் ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம் எனக்கும் அவனுக்கும்: 'அமரன்' சாய் பல்லவி வீடியோ..!

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த "அமரன்" திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், சாய் பல்லவி கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டு, தற்போது

பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்.. இன்று ரிலீஸ் ஆன படத்தின் திரையரங்கில் தீ விபத்து..!

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த "தேவாரா" திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்களின் ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்ததில், தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்

'எஸ்டிஆர் 48' படம் என்ன ஆச்சு? வெற்றி பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு..!

சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகயிருந்த 'எஸ்டிஆர் 48' படம் இன்னும் தொடங்காத நிலையில், சிம்பு வேறு ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதால் பரபரப்பு

மீண்டும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத்? ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் விஜய் இயக்கத்தில், ஏற்கனவே "தலைவி" என்ற திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க

கார் ரேஸ்-க்கு தயாராகும் அஜித்.. சூப்பர் வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்