சூர்யா 36' படத்தின் முக்கிய பணி முடிந்தது

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 36' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு அட்டகாசமான அறிமுக காட்சி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இந்த அறிமுக காட்சிக்கு பின்னணி இசையமைக்கும் முக்கிய பணியை தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா முடித்துள்ளார். பின்னணி இசை என்றாலே வெளுத்து வாங்கும் யுவன், இந்த அறிமுகக்காட்சிக்கு அமைத்துள்ள பின்னணி இசை அவரது ரசிகர்களை ஆட்டம்போட வைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் செல்வராகவன் இயக்கிய 'புதுப்பேட்டை' போன்று அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தரும் படமாக இருக்கும் என்றும், அதற்கேற்ப இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அபாரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை  ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

குண்டர் சட்டத்தில் தமிழ் நடிகை கைது: பலரை திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக புகார்

'ஆடி போனால் ஆவணி' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி.

பிரபல சினிமா பைனான்சியர் மகள் கடத்தல்

பிரபல சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்ற புகார் எழ போலீசார் அவர் கடத்தப்பட்டி

தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள்

இதுவரை தென்னிந்திய அளவில் தளபதியாக இருந்த நடிகர் விஜய், 'மெர்சல்' ரிலீசுக்கு பின்னர் இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தும் அவர் காட்டும் எளிமை தான்

அமலாபாலின் மனித நேய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்து பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி தங்களுடைய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சேவை மனப்பான்மையோடு அவ்வபோது சில மனிதநேயமிக்க செயல்களை செய்வதை பார்த்து வருகிறோம்

ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு ஜான்வி கபூரின் உருக்கமான வேண்டுகோள்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூரின் பிறந்த நாள் வரும் 7ஆம் தேதி வரவுள்ளது. இதனையடுத்து அவர் தனது தாய் ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்