திரையரங்குகளில் ரிலீஸாகும் 'சூரரைப்போற்று'  மற்றும் 'ஜெய்பீம்': எப்போது தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,July 18 2022]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது

ஓடிடியில் வெளியாகியே இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் வசூலிலும் சாதனை செய்து இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதை அடுத்து சூரரைப்போற்று மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

சென்னை பாடியில் உள்ள முக்கிய திரையரங்கில் ’சூரரைப்போற்’று மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஜூலை 23ஆம் தேதி திரையிட உள்ளதாகவும் இதற்கான டிக்கெட் புக்கிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓடிடியில் இந்த படங்களை பார்த்த சூர்யா ரசிகர்கள் பெரிய திரையில் இந்த படத்தை பார்த்து மகிழ ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'குக் வித் கோமாளி' சீசன் 3 வைல்ட் கார்ட் வெற்றியாளர்கள் இந்த இருவர் தான்!

'குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நடந்துவரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ளது என்பது தெரிந்ததே.

கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகைக்கு இரட்டை குழந்தையா?

பிரபல நடிகை ஆலியா பட் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் அவருக்கு இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமாவில் ஒற்றை தலைமை விஜய் தான்: ஜெயகுமாரின் மகன் இன்னும் என்னென்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சினிமாவில் விஜய்யை அவரது ரசிகர்கள் ஒற்றை தலைமையாக பார்க்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின்

'புஷ்பா 2' வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியின் சம்பளம் இத்தனை கோடியா?

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க 10 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நிலையில் அதை விட இருமடங்கு 'புஷ்பா 2' படத்தில் வில்லனாக நடிக்க வாங்கியுள்ளதாக கூறப்படுவதால் பெரும்

சினிமாவை நிறுத்துவது தான் உளவுத்துறையின் வேலையா? எச்.ராஜா கண்டனம்

சமீபத்தில் வெளியான திரைப்படத்தை திரையிடக் கூடாது என உளவுத்துறை அதிகாரி ஒருவர் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருவதாக கூறப்படும்