பார்வதி அம்மாளுக்கு சூர்யா செய்த மகத்தான உதவி!

  • IndiaGlitz, [Sunday,November 14 2021]

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ராசாக்கண்ணு மற்றும் செங்கனி கேரக்டர்கள் உண்மையாக வாழ்ந்தவர்கள் என்பதும் ராசாக்கண்ணு மற்றும் பார்வதி அம்மாள் ஆகியவர்களின் கதையை தழுவி தான் இந்த படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் அவர்கள் தற்போது சென்னை அருகே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு சூர்யா செய்த மகத்தான உதவி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

நடிகர் சூர்யா, பார்வதி அம்மாளுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி அளிப்பதற்காக அறிவித்துள்ளார். ஜெய்பீம் படம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துக்கு கடிதத்திற்கு நன்றி தெரிவித்த சூர்யா, அதில் தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த நன்றி கடிதத்தில், ‘பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் பார்வதி அம்மாள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்திருப்பதாகவும் அவருடைய காலத்திற்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அந்த தொகையை சேரும்படி செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்விக்கு உதவுவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு என்றும் ஆகவே தான் ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

More News

அரசியல் கட்சியில் இணையும் கொரோனா கால ஹீரோ நடிகர்!

கொரோனா நேரத்தில் ஹீரோவாக போற்றப்பட்ட நடிகர் ஒருவர் விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பா ரஞ்சித் - விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கிய 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தற்போது அவர் 'நட்சத்திரம் நகர்கிறது'

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் சூப்பர் அப்டேட்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.

ஒவ்வொரு வாரமும் விளிம்புவரை வரும் அபினய்: கமல் கூறியதன் அர்த்தம் இதுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுகிறார் என்பதும் இந்த வாரமும் நாமினேஷன் செய்யப்பட்ட ஏழு பேர்களில் ஒருவர்

'மாநாடு' படம் குறித்து செம அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து